தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பொதும்பில் கிழார் மகன் வெண்கண்ணி, பொதும்பில் கிழார் மகனார்


பொதும்பில் கிழார் மகன் வெண்கண்ணி, பொதும்பில் கிழார் மகனார்

375. நெய்தல்
நீடு சினைப் புன்னை நறுந் தாது உதிர,
கோடு புனை குருகின் தோடு தலைப் பெயரும்
பல் பூங் கானல் மல்கு நீர்ச் சேர்ப்ப!
அன்பு இலை; ஆதலின், தன் புலன் நயந்த
5
என்னும் நாணும் நன்னுதல் உவப்ப,
வருவைஆயினோ நன்றே-பெருங் கடல்
இரவுத் தலை மண்டிலம் பெயர்ந்தென, உரவுத் திரை
எறிவன போல வரூஉம்
உயர் மணல் படப்பை எம் உறைவின் ஊரே.
வரையாது நெடுங்காலம் வந்தொழுக, தலைமகளது நிலை உணர்ந்த தோழி வரைவு கடாயது-பொதும்பில் கிழார் மகன் வெண்கண்ணி

387. பாலை
நெறி இருங் கதுப்பும், நீண்ட தோளும்,
அம்ம! நாளும் தொல் நலம் சிதைய,
ஒல்லாச் செந் தொடை ஒரீஇய கண்ணிக்
கல்லா மழவர் வில்லிடை விலங்கிய
5
துன் அருங் கவலை அருஞ் சுரம் இறந்தோர்
வருவர் வாழி-தோழி!-செரு இறந்து
ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்த
வேல் கெழு தானைச் செழியன் பாசறை
உறை கழி வாளின் மின்னி, உதுக்காண்,
10
நெடும் பெருங் குன்றம் முற்றி,
கடும் பெயல் பொழியும், கலி கெழு வானே.
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறீஇயது.- பொதும்பில் கிழார் மகனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:28:53(இந்திய நேரம்)