தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்


மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

344. குறிஞ்சி
அணி வரை மருங்கின் ஐது வளர்ந்திட்ட
மணி ஏர் தோட்ட மை ஆர் ஏனல்
இரும் பிடித் தடக் கையின் தடைஇய பெரும் புனம்
காவல் கண்ணினம்ஆயின்-ஆயிழை!-
5
நம் நிலை இடை தெரிந்து உணரான், தன் மலை
ஆரம் நீவிய அணி கிளர் ஆகம்
சாரல் நீள் இடைச் சால வண்டு ஆர்ப்ப,
செல்வன் செல்லும்கொல் தானே-உயர் வரைப்
பெருங் கல் விடரகம் சிலம்ப, இரும் புலி
10
களிறு தொலைத்து உரறும் கடி இடி மழை செத்து,
செந் தினை உணங்கல் தொகுக்கும்,
இன் கல் யாணர்த் தம் உறைவின் ஊர்க்கே?
தோழி சிறைப்புறமாகத் தலைமகன் கேட்பச் சொல்லியது.-மதுரை அறுவை வாணி கன் இளவேட்டனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:29:28(இந்திய நேரம்)