தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கடுந்தோள் கரவீரன்


கடுந்தோள் கரவீரன்

69. குறிஞ்சி
கருங் கட் தாக் கலை பெரும் பிறிது உற்றென,
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன் பறழ் கிளைமுதல் சேர்த்தி,
ஓங்கு வரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும்
சாரல் நாட! நடு நாள்
வாரல்; வாழியோ! வருந்துதும் யாமே!
தோழி இரவுக்குறி மறுத்தது. - கடுந்தோட் கரவீரன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:09:29(இந்திய நேரம்)