தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

செல்வச் சிறாஅர்


செல்வச் சிறாஅர்

148. முல்லை
செல்வச் சிறாஅர் சீறடிப் பொலிந்த
தவளை வாஅய பொலம் செய் கிண்கிணிக்
காசின் அன்ன போது ஈன் கொன்றை
குருந்தொடு அலம்வரும் பெருந் தண் காலையும்,
'கார் அன்று' என்றிஆயின்,
கனவோ மற்று இது? வினவுவல் யானே.
பருவம் கண்டு அழிந்த தலைமகளைத் தோழி, 'பருவம் அன்று' என்று வற்புறுத்த, தலைமகள் சொல்லியது. - இளங்கீரந்தையார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:53:50(இந்திய நேரம்)