தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


இருப்பை

329. பாலை
கான இருப்பை வேனில் வெண் பூ
வளி பொரு நெடுஞ் சினை உஞற்றலின், ஆர் கழல்பு,
களிறு வழங்கு சிறு நெறி புதையத் தாஅம்
பிறங்குமலை அருஞ் சுரம் இறந்தவர்ப் படர்ந்து,
பயில் இருள் நடுநாள் துயில் அரிது ஆகி,
தெள் நீர் நிகர்மலர் புரையும்
நல் மலர் மழைக்கணிற்கு எளியவால், பனியே.
பிரிவிடை மெலிந்த கிழத்தி வற்புறுத்தும் தோழிக்கு, 'யான்' ஆற்றுவல்' என்பது படச் சொல்லியது. - ஓதலாந்தையார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:16:43(இந்திய நேரம்)