தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


சான்றோர் பொய் உரையார்

184. நெய்தல்

அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை;

குறுகல் ஓம்புமின் சிறுகுடிச் செலவே-

இதற்கு இது மாண்டது என்னாது, அதற்பட்டு,

ஆண்டு ஒழிந்தன்றே, மாண் தகை நெஞ்சம்-

மயிற்கண் அன்ன மாண் முடிப் பாவை

நுண் வலைப் பரதவர் மட மகள்

கண் வலைப் படூஉம் கானலானே.

கழறிய பாங்கற்குக் கிழவன் உரைத்தது. - ஆரிய அரசன் யாழ்ப் பிரமதத்தன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:26:41(இந்திய நேரம்)