தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மண் மிசை அவிழ் துழாய்

மண் மிசை அவிழ் துழாய்
8. செவ்வேள்


திருப்பரங்குன்றத்தின் அமைப்பும் சிறப்பும்

மண்மிசை அவிழ்துழாய் மலர்தரு செல்வத்துப்
புள்மிசைக் கொடியோனும், புங்கவம் ஊர்வோனும்,
மலர்மிசை முதல்வனும், மற்று அவனிடைத் தோன்றி
உலகு இருள் அகற்றிய பதின்மரும், இருவரும்,
5
மருந்து உரை இருவரும், திருந்து நூல் எண்மரும்,
ஆதிரை முதல்வனின் கிளந்த
நாதர் பன்னொருவரும், நன் திசை காப்போரும்,
யாவரும், பிறரும், அமரரும், அவுணரும்,
மேஅரு முதுமொழி விழுத் தவ முதல்வரும்
10
பற்றாகின்று, நின் காரணமாக;
பரங்குன்று இமயக் குன்றம் நிகர்க்கும்.
இமயக் குன்றினில் சிறந்து
நின் ஈன்ற நிரை இதழ்த் தாமரை
மின் ஈன்ற விளங்கு இணர் ஊழா
15
ஒருநிலைப் பொய்கையோடு ஒக்கும் நின் குன்றின்
அருவி தாழ் மாலைச் சுனை.
முதல்வ! நின் யானை முழக்கம் கேட்ட
கதியிற்றே காரின் குரல்.
குரல் கேட்ட கோழி குன்று அதிரக் கூவ,
20
மத நனி வாரணம் மாறுமாறு அதிர்ப்ப,
எதிர்குதிர் ஆகின்று அதிர்ப்பு, மலை முழை.


குன்றத்திற்கும் கூடலுக்கும் இடையிலுள்ள வழி

ஏழ் புழை ஐம் புழை யாழ் இசை கேழ்த்து அன்ன, இனம்
வீழ் தும்பி வண்டொடு மிஞிறு ஆர்ப்ப, சுனை மலர,
கொன்றை கொடி இணர் ஊழ்ப்ப, கொடி மலர்
25
மன்றல மலர, மலர் காந்தள் வாய் நாற,
நன்று அவிழ் பல் மலர் நாற, நறை பனிப்ப,
தென்றல் அசைவரூஉம் செம்மற்றே அம்ம! நின்
குன்றத்தான் கூடல் வரவு.


குன்றத்தின் முழக்கம்

குன்றம் உடைத்த ஒளிர் வேலோய்! கூடல்
30
மன்றல் கலந்த மணி முரசின் ஆர்ப்பு எழ,
காலொடு மயங்கிய கலிழ் கடலென,
மால் கடல் குடிக்கும் மழை குரலென,
ஏறு அதிர்க்கும் இந்திரன் இரும் உருமென,
மன்றல் அதிரதிர மாறுமாறு அதிர்க்கும் நின்
35
குன்றம் குமுறிய உரை.


தலைமகன் தலைமகட்குக் குன்றத்தின் சிறப்பு கூறுதல்

'தூது ஏய வண்டின் தொழுதி முரல்வு அவர்
காதல் மூதூர் மதில் கம்பலைத்தன்று;
வடு வகிர் வென்ற கண், மாந் தளிர் மேனி,
நெடு மென் பணைத் தோள், குறுந் தொடி, மகளிர்
40
ஆராக் காமம், ஆர் பொழிற் பாயல்,
வரையகத்து, இயைக்கும் வரையா நுகர்ச்சி;
முடியா நுகர்ச்சி முற்றாக் காதல்,
அடியோர் மைந்தர் அகலத்து அகலா
அலர் ஞெமல் மகன்றில் நன்னர்ப் புணர்ச்சி,
45
புலரா மகிழ்; மறப்பு அறியாது நல்கும்
சிறப்பிற்றே தண் பரங்குன்று.'


தலைமகள் புலந்து உரைத்தல்

'இனி, மன்னும் ஏதிலர் நாறுதி; ஆண்டுப்
பனி மலர்க் கண்ணாரோடு ஆட நகை மலர்
மாலைக்கு மாலை வரூஉம்; வரை சூள் நில்
50
காலை போய் மாலை வரவு.'


தலைமகன் சூளும் தலைவி விலக்கலும்

'இனி மணல் வையை இரும் பொழிலும், குன்றப்
பனி பொழி சாரலும் பார்ப்பாரும்;...
துனியல், மலருண்கண்! சொல் வேறு; நாற்றம்
கனியின் மலரின் மலிர் கால் சீப்பு இன்னது;
55
துனியல் நனி' 'நீ நின் சூள்.'


தோழி தலைமகனைச் சூள் விலக்கிக் கூறுதல்

'என் பாணி நில் நில் எலாஅ! பாணி நீ, நின் சூள்:
சான்றாளர் ஈன்ற தகாஅத் தகாஅ மகாஅன்!
ஈன்றாட்கு ஒரு பெண், இவள்.
"இருள் மை ஈர் உண் கண் இலங்கு இழை ஈன்றாட்கு
60
அரியளோ? ஆவது அறிந்திலேன்; ஈதா;
வரு புனல் வையை மணல் தொட்டேன்; தரு மண வேள்
தண் பரங்குன்றத்து அடி தொட்டேன்" என்பாய்;
கேளிர் மணலின் கெழுவும் இதுவோ?
ஏழ் உலகும் ஆளி திரு வரைமேல் அன்பு அளிதோ?
65
என்னை அருளி அருள் முருகு சூள் சூளின்,
நின்னை அருள் இல் அணங்கான் மெய் வேல் தின்னும்:
விறல் வெய்யோன் ஊர் மயில், வேல் நிழல், நோக்கி;
அறவர் அடி தொடினும், ஆங்கு அவை சூளேல்:
குறவன் மகள் ஆணை கூறு ஏலா! கூறேல்;
70
ஐய! சூளின், அடி தொடு குன்றொடு
வையைக்குத் தக்க மணல் சீர் சூள் கூறல்!'


தலைமகனது உரை

யார் பிரிய, யார் வர, யார் வினவ, யார் செப்பு?
'நீர் உரைசெய் நீர்மை இல் சூள் என்றி,' நேரிழாய்!
கய வாய நெய்தல் அலர், கமழ்முகை மண நகை
75
நயவரு நறவு இதழ், மதர் உண்கண்; வாள் நுதல்;
முகை முல்லை வென்று, எழில் முத்து ஏய்க்கும் வெண்
பல் நகை சான்ற கனவு அன்று; நனவு அன்று நவின்றதை:
இடு துனி கை ஆறா என், துயர் கூரச்
சுடும், இறை; ஆற்றிசின், அடி சேர்ந்து! சாற்றுமின்
80
மிக ஏற்றுதும் மலர், ஊட்டுதும் அவி,
கேட்டுதும் பாணி; எழுதும் கிணை முருகன்
தாள் தொழு தண் பரங்குன்று!


தோழி தலைமகளின் கற்புடைமை கூறுதல்

'தெரி இழாய் செல்க!' என்றாய்; எல்லா! யாம் பெற்றேம்,
ஒருவர்க்கும் பொய்யா நின் வாய் இல் சூள் வௌவல்;
85
பருவத்துப் பல் மாண் நீ சேறலின் காண்டை
எருமை இருந் தோட்டி எள்ளீயும் காளை
செருவம் செயற்கு என்னை முன்னை, தன் சென்னி,
அருள்வயினான், தூங்கு மணி கையால் தாக்கி,
நிரைவளை ஆற்று, இருஞ் சூள்.


தலைமகளிரது செய்தி

90
வளி பொரு சேண் சிமை வரையகத்தால்
தளி பெருகும் தண் சினைய
பொழில் கொளக் குறையா மலர,
குளிர் பொய்கை அளறு நிறைய,
மருதம் நளி மணல் ஞெமர்ந்த
95
நனி மலர்ப் பெரு வழி,
சீறடியவர் சாறு கொள எழுந்து;
வேறுபடு சாந்தமும், வீறுபடு புகையும்,
ஆறு செல் வளியின் அவியா விளக்கமும்,
நாறு கமழ் வீயும், கூறும் இசை முழவமும்,
100
மணியும், கயிறும், மயிலும், குடாரியும்,
பிணிமுகம், உளப்படப் பிறவும், ஏந்தி;
அரு வரைச் சேராத் தொழுநர்,
'கனவின் தொட்டது கை பிழையாகாது
நனவின் சேஎப்ப நின் நளி புனல் வையை
105
வரு புனல் அணிக' என வரம் கொள்வோரும்,
'கரு வயிறு உறுக' எனக் கடம்படுவோரும்,
'செய் பொருள் வாய்க்க' எனச் செவி சார்த்துவோரும்,
'ஐ அமர் அடுக' என அருச்சிப்போரும்,
பாடுவார் பாணிச் சீரும், ஆடுவார் அரங்கத் தாளமும்,
110
மஞ்சு ஆடு மலை முழக்கும்,
துஞ்சாக் கம்பலை
பைஞ் சுனைப் பாஅய் எழு பாவையர்
ஆய் இதழ் உண்கண் அலர் முகத் தாமரை,
தாட் தாமரை, தோட் தமனியக் கய மலர்,
115
எம் கைப் பதுமம், கொங்கைக் கய முகை,
செவ் வாய் ஆம்பல் செல் நீர்த் தாமரை,
புனற் தாமரையொடு, புலம் வேறுபாடுறாக்
கூர் எயிற்றார் குவிமுலைப் பூணொடு,
மாரன் ஒப்பார் மார்பு அணி கலவி;
120
அரிவையர் அமிர்த பானம்
உரிமை மாக்கள் உவகை அமிர்து உய்ப்ப;
மைந்தர் மார்வம் வழி வந்த,
செந் தளிர் மேனியார், செல்லல் தீர்ப்ப;


பரங்குன்றை வாழ்த்தல்

என ஆங்கு,
125
உடம் புணர் காதலரும் அல்லாரும் கூடி,
கடம்பு அமர் செல்வன் கடி நகர் பேண
மறு மிடற்று அண்ணற்கு மாசிலோள் தந்த
நெறி நீர் அருவி அசும்பு உறு செல்வம்,
மண் பரிய வானம் வறப்பினும், மன்னுகமா,
130
தண் பரங்குன்றம்! நினக்கு.


கடவுள் வாழ்த்து
ஆசிரியன் நல்லந்துவனார் பாட்டு
மருத்துவன் நல்லச்சுதனார் இசை
பண்ணுப் பாலையாழ்

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 12:30:56(இந்திய நேரம்)