Skip to main content
தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY
தேடல் படிவம்
தேடல்
த.இ.க. பற்றி
தொடர்புக்கு
மொழிகள்
தமிழ்
English
தமிழ் இணையக் கல்விக்கழகம் - Tamil Virtual Academy
தமிழ் இணையக் கல்விக்கழகம்
- Tamil Virtual Academy
Navigation
கல்வித் திட்டங்கள்
தொடர்பு மையங்கள்
ஒப்பந்தப் படிவம்
கட்டண விவரங்கள்
மாணவர் பதிவு
தேர்வு முறை
மின் கற்றலுக்கான இணையத்தளம்
தமிழ்ப் பரப்புரைக்கழகம்
கல்வி விவரங்கள்
மழலைக்கல்வி
சான்றிதழ்
மேற்சான்றிதழ்
பட்டயம்
மேற்பட்டயம்
பட்டம்
ஆசிரியர் பட்டயப் பயிற்சி
பாடங்கள்
மழலைக்கல்வி
சான்றிதழ்
மேற்சான்றிதழ்
பட்டயம்
மேற் பட்டயம்
பட்டம்
பிற
புதிய பாடத்திட்டம் 2022
ஆசிரியர் பட்டயப் பயிற்சி
தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
மற்ற குறிப்புகள்
இணைய வகுப்பறை
குறிப்புப் புத்தகங்கள்
கையடக்க கருவிகளில் த.இ.க
தமிழ்க்கருவிகள்
பிற இணையத்தளங்கள்
அயல் நாடுகளில் தமிழ்ப் பள்ளிகள்
பயணியர் தமிழ்
பயில் செயலி
நூலகம்
நூல்கள்
நிகண்டுகள்
அகராதிகள்
கலைச்சொற்கள்
கலைக்களஞ்சியங்கள்
சுவடிக்காட்சியகம்
பண்பாட்டுக் காட்சியகம்
திருத்தலங்கள்
திருவிழாக்கள்
வரலாற்றுச்சின்னங்கள்
கலைகள்
விளையாட்டுகள்
திருக்கோயில்கள் சாலை வரைபடம்
தமிழிணையம் - மின்னூலகம்
கணித்தமிழ்
கணித்தமிழ்ப் பேரவை
வலைப்பூக்கள்
கருத்துரைக்க
தமிழ்க்கருவிகள்
காட்சியகம்
கான் கல்விக்கழகக் காணொலிகள்
தமிழ் மென்பொருள்கள்
தமிழ் ஒருங்குறி
மென்பொருள் சான்றளிப்பு
கணினித் தமிழ் வளர்ச்சியும் சவால்களும்
தமிழ்ப்பெருங்களஞ்சியம்
மென்பொருள் பதிவிறக்கங்கள்
ஆய்வு மற்றும் உருவாக்கம்
இலக்கணக் குறிப்பு விரிதரவு
இலக்கிய விரிதரவகம்
தொடரியல்-பொருண்மை விரிதரவகம்
சொல்-பொருள் இலக்கியம்
தமிழ் சொற்றொடர்-அமைப்பு-விதிமுறை
இயற்கை மொழியாய்வுக் கருவிகள்
தமிழ்க் கணினிக் கருவிகள்
வாய்மொழித் தரவு
தமிழ் மென்பொருள் மேம்பாட்டு நிதி
தமிழ் எழுத்துருக்கள்
தகவலாற்றுப்படை
தமிழகத் தகவல் தளம்
விளக்க விரிவுரைகள்
மாதந்திர தொடர் சொற்பொழிவு அழைப்பிதழ்கள்
தமிழிணையம் - தமிழர் தகவலாற்றுப்படை
மாதந்திர தொடர் சொற்பொழிவு
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - குறும்படங்கள்
முகப்பு
>
நூலகம்
>
நூல்கள்
>
கபிலர்
கபிலர்
Primary tabs
பார்
(active tab)
What links here
பாடினோர் பகுதி
கபிலர்
2. குறிஞ்சி
கோழிலை வாழைக் கோள் முதிர் பெருங் குலை
ஊழுறு தீம் கனி, உண்ணுநர்த் தடுத்த
சாரற் பலவின் சுளையொடு, ஊழ் படு
பாறை நெடுஞ் சுனை, விளைந்த தேறல்
5
அறியாது உண்ட கடுவன் அயலது
கறி வளர் சாந்தம் ஏறல்செல்லாது,
நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்
குறியா இன்பம், எளிதின், நின் மலைப்
பல் வேறு விலங்கும், எய்தும் நாட!
10
குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய?
வெறுத்த ஏஎர், வேய் புரை பணைத் தோள்,
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு,
இவளும், இனையள்ஆயின், தந்தை
அருங் கடிக் காவலர் சோர் பதன் ஒற்றி,
15
கங்குல் வருதலும் உரியை; பைம் புதல்
வேங்கையும் ஒள் இணர் விரிந்தன;
நெடு வெண் திங்களும் ஊர்கொண்டன்றே.
பகற்குறிக்கண் செறிப்பு அறிவுறீஇத் தோழி வரைவு கடாயது. - கபிலர்
உரை
12. குறிஞ்சி
யாயே, கண்ணினும் கடுங் காதலளே;
எந்தையும், நிலன் உறப் பொறாஅன்; 'சீறடி சிவப்ப,
எவன், இல! குறுமகள்! இயங்குதி?' என்னும்;
யாமே, பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின்,
5
இரு தலைப் புள்ளின் ஓர் உயிரம்மே;
ஏனல்அம் காவலர் ஆனாது ஆர்த்தொறும்,
கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெருஞ் சினை,
விழுக் கோட் பலவின் பழுப் பயம் கொண்மார்,
குறவர் ஊன்றிய குரம்பை புதைய,
10
வேங்கை தாஅய தேம் பாய் தோற்றம்
புலி செத்து, வெரீஇய புகர்முக வேழம்,
மழை படு சிலம்பில் கழைபட, பெயரும்
நல் வரை நாட! நீ வரின்,
மெல்லியல் ஓரும் தான் வாழலளே.
பகற்குறி வாராநின்ற தலைமகன் தோழியால் செறிப்பு அறிவுறுக்கப்பட்டு, 'இரவுக் குறி வாரா வரைவல்' என்றாற்கு, அதுவும் மறுத்து, வரைவு கடாயது. - கபிலர்
உரை
18. குறிஞ்சி
நீர் நிறம் கரப்ப, ஊழுறுபு உதிர்ந்து,
பூமலர் கஞலிய கடு வரற் கான் யாற்று,
கராஅம் துஞ்சும் கல் உயர் மறி சுழி,
மராஅ யானை மதம் தப ஒற்றி,
5
உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம்
கடுங்கண் பன்றியின் நடுங்காது துணிந்து,
நாம அருந் துறைப் பேர்தந்து, யாமத்து
ஈங்கும் வருபவோ? ஓங்கல் வெற்ப!
ஒரு நாள் விழுமம் உறினும், வழி நாள்,
10
வாழ்குவள்அல்லள், என் தோழி; யாவதும்
ஊறு இல் வழிகளும் பயில வழங்குநர்
நீடு இன்று ஆக இழுக்குவர்; அதனால்,
உலமரல் வருத்தம் உறுதும்; எம் படப்பைக்
கொடுந் தேன் இழைத்த கோடு உயர் நெடு வரை,
15
பழம் தூங்கு நளிப்பின் காந்தள்அம் பொதும்பில்,
பகல் நீ வரினும் புணர்குவை அகல் மலை
வாங்கு அமைக் கண் இடை கடுப்ப, யாய்
ஓம்பினள் எடுத்த, தட மென் தோளே.
தோழி இரவு வருவானைப் பகல் வா என்றது. - கபிலர்
உரை
42. குறிஞ்சி
மலி பெயல் கலித்த மாரிப் பித்திகத்துக்
கொயல் அரு நிலைஇய பெயல் ஏர் மண முகைச்
செவ் வெரிந் உறழும் கொழுங் கடை மழைக் கண்,
தளிர் ஏர் மேனி, மாஅயோயே!
5
நாடு வறம் கூர, நாஞ்சில் துஞ்ச,
கோடை நீடிய பைது அறு காலை,
குன்று கண்டன்ன கோட்ட, யாவையும்
சென்று சேக்கல்லாப் புள்ள, உள் இல்
என்றூழ் வியன்குளம் நிறைய வீசி,
10
பெரும் பெயல் பொழிந்த ஏம வைகறை,
பல்லோர் உவந்த உவகை எல்லாம்
என்னுள் பெய்தந்தற்றே சேண் இடை
ஓங்கித் தோன்றும் உயர் வரை
வான் தோய் வெற்பன் வந்தமாறே
தலைமகன் வரைவு மலிந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது.- கபிலர்
உரை
82. குறிஞ்சி
ஆடு அமைக் குயின்ற அவிர் துளை மருங்கின்
கோடை அவ் வளி குழலிசை ஆக,
பாடு இன் அருவிப் பனி நீர் இன் இசை
தோடு அமை முழவின் துதை குரல் ஆக,
5
கணக் கலை இகுக்கும் கடுங் குரற் தூம்பொடு,
மலைப் பூஞ் சாரல் வண்டு யாழ் ஆக,
இன் பல் இமிழ் இசை கேட்டு, கலி சிறந்து,
மந்தி நல் அவை மருள்வன நோக்க,
கழை வளர் அடுக்கத்து, இயலி ஆடு மயில்
10
நனவுப் புகு விறலியின் தோன்றும் நாடன்
உருவ வல் விற் பற்றி, அம்பு தெரிந்து,
செருச் செய் யானை செல் நெறி வினாஅய்,
புலர் குரல் ஏனற் புழையுடை ஒரு சிறை,
மலர் தார் மார்பன், நின்றோற் கண்டோர்
15
பலர்தில், வாழி தோழி! அவருள்,
ஆர் இருட் கங்குல் அணையொடு பொருந்தி,
ஓர் யான் ஆகுவது எவன்கொல்,
நீர் வார் கண்ணொடு, நெகிழ் தோளேனே?
தோழிக்குத் தலைவி அறத்தொடு நின்றது. - கபிலர்
உரை
118. குறிஞ்சி
கறங்கு வெள் அருவி பிறங்கு மலைக் கவாஅன்,
தேம் கமழ் இணர வேங்கை சூடி,
தொண்டகப் பறைச் சீர் பெண்டிரொடு விரைஇ,
மறுகில் தூங்கும் சிறுகுடிப் பாக்கத்து,
5
இயல் முருகு ஒப்பினை, வய நாய் பிற்பட,
பகல் வரின், கவ்வை அஞ்சுதும்; இகல் கொள,
இரும் பிடி கன்றொடு விரைஇய கய வாய்ப்
பெருங் கை யானைக் கோள் பிழைத்து, இரீஇய
அடு புலி வழங்கும் ஆர் இருள் நடு நாள்
10
தனியை வருதல் அதனினும் அஞ்சுதும்.
என் ஆகுவள்கொல்தானே? பல் நாள்
புணர் குறி செய்த புலர்குரல் ஏனல்
கிளி கடி பாடலும் ஒழிந்தனள்;
அளியள்தான், நின் அளி அலது இலளே!
செறிப்பு அறிவுறீஇ, 'இரவும் பகலும் வாரல்' என்று வரைவு கடாஅயது.- கபிலர்
உரை
128. குறிஞ்சி
மன்று பாடு அவிந்து மனை மடிந்தன்றே;
கொன்றோரன்ன கொடுமையோடு இன்றே
யாமம் கொள வரின் கனைஇ, காமம்
கடலினும் உரைஇ, கரை பொழியும்மே.
5
எவன்கொல் வாழி, தோழி! மயங்கி
இன்னம் ஆகவும், நன்னர் நெஞ்சம்
என்னொடும் நின்னொடும் சூழாது, கைம்மிக்கு,
இறும்பு பட்டு இருளிய இட்டு அருஞ் சிலம்பில்
குறுஞ் சுனைக் குவளை வண்டு படச் சூடி,
10
கான நாடன் வரூஉம், யானைக்
கயிற்றுப் புறத்தன்ன, கல்மிசைச் சிறு நெறி,
மாரி வானம் தலைஇ நீர் வார்பு,
இட்டு அருங் கண்ண படுகுழி இயவின்,
இருளிடை மிதிப்புழி நோக்கி, அவர்
15
தளர்அடி தாங்கிய சென்றது, இன்றே?
இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகள் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - கபிலர்
உரை
158. குறிஞ்சி
'உரும் உரறு கருவிய பெரு மழை தலைஇ,
பெயல் ஆன்று அவிந்த தூங்குஇருள் நடுநாள்,
மின்னு நிமிர்ந்தன்ன கனங்குழை இமைப்ப,
பின்னு விடு நெறியின் கிளைஇய கூந்தலள்,
5
வரை இழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி,
மிடை ஊர்பு இழிய, கண்டனென், இவள்' என
அலையல் வாழி! வேண்டு, அன்னை! நம் படப்பைச்
சூருடைச் சிலம்பில், சுடர்ப்பூ வேய்ந்து
தாம் வேண்டு உருவின் அணங்குமார் வருமே;
10
நனவின் வாயே போலத் துஞ்சுநர்க்
கனவு ஆண்டு மருட்டலும் உண்டே; இவள்தான்
சுடர் இன்று தமியளும் பனிக்கும்; வெருவர
மன்ற மராஅத்த கூகை குழறினும்,
நெஞ்சு அழிந்து அரணம் சேரும்; அதன்தலைப்
15
புலிக் கணத்தன்ன நாய் தொடர்விட்டு,
முருகன் அன்ன சீற்றத்துக் கடுந் திறல்
எந்தையும் இல்லன் ஆக,
அஞ்சுவள் அல்லளோ, இவள் இது செயலே?
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி செவிலித்தாய்க்குச் சொல்லுவாளாய்,தலைமகன் கேட்பச் சொல்லியது. - கபிலர்
உரை
182. குறிஞ்சி
பூங் கண் வேங்கைப் பொன் இணர் மிலைந்து,
வாங்கு அமை நோன் சிலை எருத்தத்து இரீஇ,
தீம் பழப் பலவின் சுளை விளை தேறல்
வீளை அம்பின் இளையரொடு மாந்தி,
5
ஓட்டு இயல் பிழையா வய நாய் பிற்பட,
வேட்டம் போகிய குறவன் காட்ட
குளவித் தண் புதல் குருதியொடு துயல் வர,
முளவுமாத் தொலைச்சும் குன்ற நாட!
அரவு எறி உருமோடு ஒன்றிக் கால் வீழ்த்து
10
உரவு மழை பொழிந்த பானாட் கங்குல்,
தனியை வந்த ஆறு நினைந்து, அல்கலும்,
பனியொடு கலுழும் இவள் கண்ணே; அதனால்,
கடும் பகல் வருதல் வேண்டும் தெய்ய
அதிர் குரல் முது கலை கறி முறி முனைஇ,
15
உயர்சிமை நெடுங் கோட்டு உகள, உக்க
கமழ் இதழ் அலரி தாஅய் வேலன்
வெறி அயர் வியன் களம் கடுக்கும்
பெரு வரை நண்ணிய சாரலானே.
தோழி இரா வருவானைப் 'பகல் வா' என்றது. - கபிலர்
உரை
203. பாலை
'உவக்குநள்ஆயினும், உடலுநள்ஆயினும்,
யாய் அறிந்து உணர்க' என்னார், தீ வாய்
அலர் வினை மேவல் அம்பற் பெண்டிர்,
'இன்னள் இனையள், நின் மகள்' என, பல் நாள்
5
எனக்கு வந்து உரைப்பவும், தனக்கு உரைப்பு அறியேன்,
'நாணுவள் இவள்' என, நனி கரந்து உறையும்
யான் இவ் வறு மனை ஒழிய, தானே,
'அன்னை அறியின், இவண் உறை வாழ்க்கை
எனக்கு எளிது ஆகல் இல்' என, கழற் கால்
10
மின் ஒளிர் நெடு வேல் இளையோன் முன்னுற,
பல் மலை அருஞ் சுரம் போகிய தனக்கு, யான்
அன்னேன் அன்மை நன் வாயாக,
மான் அதர் மயங்கிய மலைமுதல் சிறு நெறி
வெய்து இடையுறாஅது எய்தி, முன்னர்ப்
15
புல்லென் மா மலைப் புலம்பு கொள் சீறூர்,
செல் விருந்து ஆற்றி, துச்சில் இருத்த,
நுனை குழைத்து அலமரும் நொச்சி
மனை கெழு பெண்டு யான் ஆகுகமன்னே!
மகட் போக்கிய தாய் சொல்லியது. - கபிலர்
உரை
218. குறிஞ்சி
'கிளை பாராட்டும் கடு நடை வயக் களிறு
முளை தருபு ஊட்டி, வேண்டு குளகு அருத்த,
வாள் நிற உருவின் ஒளிறுபு மின்னி,
பரூஉ உறைப் பல் துளி சிதறி, வான் நவின்று,
5
பெரு வரை நளிர் சிமை அதிர வட்டித்து,
புயல் ஏறு உரைஇய வியல் இருள் நடு நாள்,
விறல் இழைப் பொலிந்த காண்பு இன் சாயல்,
தடைஇத் திரண்ட நின் தோள் சேர்பு அல்லதை,
படாஅவாகும், எம் கண்' என, நீயும்,
10
'இருள் மயங்கு யாமத்து இயவுக் கெட விலங்கி,
வரி வயங்கு இரும் புலி வழங்குநர்ப் பார்க்கும்
பெரு மலை விடரகம் வர அரிது' என்னாய்,
வர எளிதாக எண்ணுதி; அதனால்,
நுண்ணிதின் கூட்டிய படு மாண் ஆரம்
15
தண்ணிது கமழும் நின் மார்பு, ஒரு நாள்
அடைய முயங்கேம்ஆயின், யாமும்
விறல் இழை நெகிழச் சாஅய்தும்; அதுவே
அன்னை அறியினும் அறிக! அலர் வாய்
அம்பல் மூதூர் கேட்பினும் கேட்க!
20
வண்டு இறை கொண்ட எரி மருள் தோன்றியொடு,
ஒண் பூ வேங்கை கமழும்
தண் பெருஞ் சாரல் பகல் வந்தீமே!
தோழி தலைமகளை இடத்து உய்த்து வந்து, பகற்குறி நேர்ந்த வாய்பாட்டால், தலை மகனை வரைவு கடாயது. - கபிலர்
உரை
238. குறிஞ்சி
மான்றமை அறியா மரம் பயில் இறும்பின்,
ஈன்று இளைப்பட்ட வயவுப் பிணப் பசித்தென,
மட மான் வல்சி தரீஇய, நடு நாள்,
இருள் முகைச் சிலம்பின், இரை வேட்டு எழுந்த
5
பணை மருள் எருத்தின் பல் வரி இரும் போத்து,
மடக் கண் ஆமான் மாதிரத்து அலற,
தடக் கோட்டு ஆமான் அண்ணல் ஏஎறு,
நனந்தலைக் கானத்து வலம் படத் தொலைச்சி,
இருங் கல் வியல் அறை சிவப்ப ஈர்க்கும்
10
பெருங் கல் நாட! பிரிதிஆயின்,
மருந்தும் உடையையோ மற்றே இரப்போர்க்கு
இழை அணி நெடுந் தேர் களிறொடு என்றும்
மழை சுரந்தன்ன ஈகை, வண் மகிழ்,
கழல் தொடித் தடக் கை, கலிமான், நள்ளி
15
நளி முகை உடைந்த நறுங் கார் அடுக்கத்து,
போந்தை முழு முதல் நிலைஇய காந்தள்
மென் பிணி முகை அவிழ்ந்து அலர்ந்த
தண் கமழ் புது மலர் நாறும் நறு நுதற்கே?
இரவுக்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. - கபிலர்
உரை
248. குறிஞ்சி
நகை நீ கேளாய் தோழி! அல்கல்;
வய நாய் எறிந்து, வன் பறழ் தழீஇ,
இளையர் எய்துதல் மடக்கி, கிளையொடு
நால்முலைப் பிணவல் சொலிய கான் ஒழிந்து,
5
அரும் புழை முடுக்கர் ஆள் குறித்து நின்ற
தறுகட் பன்றி நோக்கி, கானவன்
குறுகினன் தொடுத்த கூர்வாய்ப் பகழி
மடை செலல் முன்பின் தன் படை செலச் செல்லாது,
'அரு வழி விலக்கும் எம் பெருவிறல் போன்ம்' என,
10
எய்யாது பெயரும் குன்ற நாடன்
செறி அரில் துடக்கலின், பரீஇப் புரி அவிழ்ந்து,
ஏந்து குவவு மொய்ம்பின் பூச் சோர் மாலை,
ஏற்று இமிற் கயிற்றின், எழில் வந்து துயல்வர,
இல் வந்து நின்றோற் கண்டனள், அன்னை;
15
வல்லே என் முகம் நோக்கி,
'நல்லை மன்!' என நகூஉப் பெயர்ந்தோளே.
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்,தலைமகன் கேட்ப, தோழி சொல்லியது. - கபிலர்
உரை
278. குறிஞ்சி
குண கடல் முகந்த கொள்ளை வானம்
பணை கெழு வேந்தர் பல் படைத் தானைத்
தோல் நிரைத்தனைய ஆகி, வலன் ஏர்பு,
கோல் நிமிர் கொடியின் வசி பட மின்னி,
5
உரும் உரறு அதிர் குரல் தலைஇ, பானாள்,
பெரு மலை மீமிசை முற்றினஆயின்,
வாள் இலங்கு அருவி தாஅய், நாளை,
இரு வெதிர் அம் கழை ஒசியத் தீண்டி
வருவதுமாதோ, வண் பரி உந்தி,
10
நனி பெரும் பரப்பின் நம் ஊர் முன்துறை;
பனி பொரு மழைக் கண் சிவப்ப, பானாள்
முனி படர் அகல மூழ்குவம்கொல்லோ
மணி மருள் மேனி ஆய்நலம் தொலைய,
தணிவு அருந் துயரம் செய்தோன்
15
அணி கிளர் நெடு வரை ஆடிய நீரே?
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாக, தலைமகட்குத் தோழி சொல்லியது. - கபிலர்
உரை
292.குறிஞ்சி
கூறாய், செய்வது தோழி! வேறு உணர்ந்து,
அன்னையும் பொருள் உகுத்து அலமரும்; மென் முறிச்
சிறு குளகு அருந்து, தாய் முலை பெறாஅ,
மறி கொலைப் படுத்தல் வேண்டி, வெறி புரி
5
ஏதில் வேலன் கோதை துயல்வரத்
தூங்கும்ஆயின், அதூஉம் நாணுவல்;
இலங்கு வளை நெகிழ்ந்த செல்லல்; புலம் படர்ந்து,
இரவின் மேயல் மரூஉம் யானைக்
கால் வல் இயக்கம் ஒற்றி, நடு நாள்,
10
வரையிடைக் கழுதின் வன் கைக் கானவன்
கடு விசைக் கவணின் எறிந்த சிறு கல்
உடு உறு கணையின் போகி, சாரல்
வேங்கை விரி இணர் சிதறி, தேன் சிதையூஉ,
பலவின் பழத்துள் தங்கும்
15
மலை கெழு நாடன் மணவாக்காலே!
வெறி அச்சுறீஇ,தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - கபிலர்
உரை
318. குறிஞ்சி
கான மான் அதர் யானையும் வழங்கும்;
வான மீமிசை உருமும் நனி உரறும்;
அரவும் புலியும் அஞ்சுதகவு உடைய;
இர வழங்கு சிறு நெறி தமியை வருதி
5
வரை இழி அருவிப் பாட்டொடு பிரசம்
முழவு சேர் நரம்பின் இம்மென இமிரும்,
பழ விறல் நனந்தலைப் பய மலை நாட!
மன்றல் வேண்டினும் பெறுகுவை; ஒன்றோ
இன்று தலையாக வாரல்; வரினே,
10
ஏம் உறு துயரமொடு யாம் இவண் ஒழிய,
எக் கண்டு பெயருங் காலை, யாழ நின்
கல் கெழு சிறுகுடி எய்திய பின்றை,
ஊதல் வேண்டுமால் சிறிதே வேட்டொடு
வேய் பயில் அழுவத்துப் பிரிந்த நின்
15
நாய் பயிர் குறி நிலை கொண்ட கோடே!
இரவுக்குறி வந்த தலைமகனை வரவு விலக்கி வரைவு கடாயது. - கபிலர்
உரை
332. குறிஞ்சி
முளை வளர் முதல மூங்கில் முருக்கி,
கிளையொடு மேய்ந்த கேழ் கிளர் யானை,
நீர் நசை மருங்கின் நிறம் பார்த்து ஒடுங்கிய,
பொரு முரண் உழுவை தொலைச்சி, கூர் நுனைக்
5
குருதிச் செங் கோட்டு அழி துளி கழாஅ,
கல் முகை அடுக்கத்து மென்மெல இயலி,
செறு பகை வாட்டிய செம்மலொடு, அறு கால்
யாழ் இசைப் பறவை இமிர, பிடி புணர்ந்து,
வாழை அம் சிலம்பில் துஞ்சும் நாடன்
10
நின் புரை தக்க சாயலன் என, நீ
அன்பு உரைத்து அடங்கக் கூறிய இன் சொல்
வாய்த்தன வாழி, தோழி! வேட்டோர்க்கு
அமிழ்தத்து அன்ன கமழ் தார் மார்பின்
வண்டு இடைப் படாஅ முயக்கமும்,
15
தண்டாக் காதலும், தலை நாள் போன்மே!
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது. -கபிலர்
உரை
382. குறிஞ்சி
'பிறர் உறு விழுமம் பிறரும் நோப;
தம் உறு விழுமம் தமக்கோ தஞ்சம்;
கடம்பு கொடி யாத்து, கண்ணி சூட்டி,
வேறு பல் குரல ஒரு தூக்கு இன் இயம்
5
காடு கெழு நெடு வேட் பாடு கொளைக்கு ஏற்ப,
அணங்கு அயர் வியன் களம் பொலிய, பையத்
தூங்குதல் புரிந்தனர், நமர்' என, ஆங்கு அவற்கு
அறியக் கூறல் வேண்டும் தோழி!
அருவி பாய்ந்த கரு விரல் மந்தி
10
செழுங் கோட் பலவின் பழம் புணையாக,
சாரல் பேர் ஊர் முன்துறை இழிதரும்
வறன் உறல் அறியாச் சோலை,
விறல் மலை நாடன் சொல் நயந்தோயே!
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லியது. - கபிலர்
உரை
மேல்
Tags :
பார்வை 174
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 14:49:11(இந்திய நேரம்)
Legacy Page