மான்(மரை, இரலை, நவ்வி, கலை, மா, உழை, திரி மருப்பு
ஏற்று, ஏறு)
3. பாலை
இருங் கழி முதலை மேஎந்தோல் அன்ன
கருங் கால் ஓமைக் காண்பு இன் பெருஞ் சினைக்
கடியுடை நனந்தலை, ஈன்று இளைப்பட்ட,
கொடு வாய்ப் பேடைக்கு அல்குஇரை தரீஇய,
5
மான்று வேட்டு எழுந்த செஞ் செவி எருவை
வான் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன்,
துளங்கு நடை மரையா வலம் படத் தொலைச்சி,
ஒண் செங் குருதி உவற்றி உண்டு அருந்துபு,
புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை,
10
கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும்
புல் இலை மராஅத்த அகன் சேண் அத்தம்,
கலம் தரல் உள்ளமொடு கழியக் காட்டி,
பின் நின்று துரக்கும் நெஞ்சம்! நின் வாய்
வாய்போல் பொய்ம்மொழி எவ்வம் என் களைமா
15
கவிர் இதழ் அன்ன காண்பு இன் செவ் வாய்,
அம் தீம் கிளவி, ஆய் இழை, மடந்தை
கொடுங் குழைக்கு அமர்த்த நோக்கம்
நெடுஞ் சேண் ஆர் இடை விலங்கும் ஞான்றே?
முன் ஒரு காலத்து, நெஞ்சினால்
பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்தான், தலைமகன்; பிரிந்து
இடைச் சுரத்தினின்று அவள் நலம் நயந்து மீளலுற்ற
நெஞ்சினைக் கழறிப்போய், பொருள் முடித்து வந்த தலைமகன்,
பின்னும் பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் சொல்லிச்
செலவழுங்கியது.
- எயினந்தை மகனார் இளங்கீரனார்.
முன் ஒரு காலத்துப்
பொருள்வயிற் பிரிந்த தலைமகன் பொருள் முற்றி
வந்திருந்த காலத்து, மீண்டும் பொருள் கடாவின
நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர்ஞாழார்
மகனார் மள்ளனார்