தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
72
'நகுதக்கனரே, நாடு மீக்கூறுநர்;
இளையன் இவன்' என உளையக் கூறி,
'படு மணி இரட்டும் பா அடிப் பணைத் தாள்
நெடு நல் யானையும், தேரும், மாவும்,
5
படை அமை மறவரும், உடையம் யாம்' என்று
உறு துப்பு அஞ்சாது, உடல் சினம் செருக்கி,
சிறு சொல் சொல்லிய சினம் கெழு வேந்தரை
அருஞ் சமம் சிதையத் தாக்கி, முரசமொடு
ஒருங்கு அகப்படேஎன் ஆயின் பொருந்திய
10
என் நிழல் வாழ்நர் செல் நிழல் காணாது,
'கொடியன் எம் இறை' எனக் கண்ணீர் பரப்பி,
குடி பழி தூற்றும் கோலேன் ஆகுக;
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக,
15
உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக, என் நிலவரை;
புரப்போர் புன்கண் கூர,
இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே.
திணையும் துறையும் அவை.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் பாட்டு.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 22:24:49(இந்திய நேரம்)