தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விரிச்சியூர் நன்னாகனார்

விரிச்சியூர் நன்னாகனார்
292
வேந்தற்கு ஏந்திய தீம் தண் நறவம்
யாம் தனக்கு உறுமுறை வளாவ, விலக்கி,
'வாய் வாள் பற்றி நின்றனன்' என்று,
சினவல் ஓம்புமின், சிறு புல்லாளர்!
5
ஈண்டே போல வேண்டுவன்ஆயின்,
என் முறை வருக என்னான், கம்மென
எழு தரு பெரும் படை விலக்கி,
ஆண்டும் நிற்கும் ஆண்தகையன்னே.
திணை வஞ்சி; துறை பெருஞ்சோற்றுநிலை.
விரிச்சியூர் நன்னாகனார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 22:38:56(இந்திய நேரம்)