தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கரும்பனூர் கிழான்

கரும்பனூர் கிழான்
381
ஊனும் ஊணும் முனையின், இனிது என,
பாலின் பெய்தவும், பாகின் கொண்டவும்,
அளவுபு கலந்து, மெல்லிது பருகி,
விருந்துறுத்து, ஆற்றி இருந்தனெமாக,
5
'சென்மோ, பெரும! எம் விழவுடை நாட்டு?' என,
யாம் தன் அறியுநமாக, தான் பெரிது
அன்பு உடைமையின், எம் பிரிவு அஞ்சி,
துணரியது கொளாஅவாகி, பழம் ஊழ்த்து,
பயம் பகர்வு அறியா மயங்கு அரில் முது பாழ்,
10
பெயல் பெய்தன்ன, செல்வத்து ஆங்கண்,
ஈயா மன்னர் புறங்கடைத் தோன்றி,
சிதாஅர் வள்பின் சிதர்ப் புறத் தடாரி
ஊன் சுகிர் வலந்த தெண் கண் ஒற்றி,
விரல் விசை தவிர்க்கும் அரலை இல் பாணியின்,
15
இலம்பாடு அகற்றல் யாவது? புலம்பொடு
தெருமரல் உயக்கமும் தீர்க்குவெம்; அதனால்,
இரு நிலம் கூலம் பாற, கோடை
வரு மழை முழக்கு இசைக்கு ஓடிய பின்றை,
சேயைஆயினும், இவணைஆயினும்,
20
இதற்கொண்டு அறிநை; வாழியோ, கிணைவ!
சிறு நனி, ஒரு வழிப் படர்க என்றோனே எந்தை,
ஒலி வெள் அருவி வேங்கட நாடன்,
உறுவரும் சிறுவரும் ஊழ் மாறு உய்க்கும்
அறத்துறை அம்பியின் மான, மறப்பு இன்று,
25
இருங் கோள் ஈராப் பூட்கை,
கரும்பனூரன் காதல் மகனே.
திணையும் துறையும் அவை.
கரும்பனூர் கிழானை நன்னாகனார் பாடியது.

384
மென்பாலான் உடன் அணைஇ,
வஞ்சிக் கோட்டு உறங்கு நாரை
அறைக் கரும்பின் பூ அருந்தும்;
வன்பாலான் கருங் கால் வரகின்
5
......................................................
அம் கண் குறு முயல வெருவ, அயல
கருங் கோட்டு இருப்பைப் பூ உறைக்குந்து;
விழவு இன்றாயினும், உழவர் மண்டை
இருங் கெடிற்று மிசையொடு பூங் கள் வைகுந்து;
10
................................................கிணையேம், பெரும!
நெல் என்னா, பொன் என்னா,
கனற்றக் கொண்ட நறவு என்னா,
.....................மனை என்னா, அவை பலவும்
யான் தண்டவும், தான் தண்டான்,
15
நிணம் பெருத்த கொழுஞ் சோற்றிடை,
மண் நாணப் புகழ் வேட்டு,
நீர் நாண நெய் வழங்கி,
புரந்தோன்; எந்தை; யாமலந்தொலை.....
அன்னோனை உடையேம் என்ப;....... வறட்கு
20
யாண்டு நிற்க வெள்ளி, மாண்ட
உண்ட நன் கலம் பெய்து நுடக்கவும்,
தின்ற நண் பல் ஊன் தோண்டவும்,
வந்த வைகல் அல்லது,
சென்ற எல்லைச் செலவு அறியேனே.
திணையும் துறையும் அவை.
கரும்பனூர் கிழானைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 22:56:22(இந்திய நேரம்)