தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ

சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ
11
அரி மயிர்த் திரள் முன்கை,
வால் இழை, மட மங்கையர்
வரி மணல் புனை பாவைக்குக்
குலவுச் சினைப் பூக் கொய்து,
5
தண் பொருநைப் புனல் பாயும்,
விண் பொரு புகழ், விறல் வஞ்சி,
பாடல் சான்ற விறல் வேந்தனும்மே,
வெப்பு உடைய அரண் கடந்து,
துப்பு உறுவர் புறம் பெற்றிசினே;
10
புறம் பெற்ற வய வேந்தன்
மறம் பாடிய பாடினியும்மே,
ஏர் உடைய விழுக் கழஞ்சின்,
சீர் உடைய இழை பெற்றிசினே;
இழை பெற்ற பாடினிக்குக்
15
குரல் புணர் சீர்க் கொளை வல் பாண் மகனும்மே,
என ஆங்கு,
ஒள் அழல் புரிந்த தாமரை
வெள்ளி நாரால் பூ பெற்றிசினே.
திணை பாடாண் திணை; துறை பரிசில் கடா நிலை.
சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோவைப் பேய்மகள் இளவெயினி பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 23:02:34(இந்திய நேரம்)