சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ் சாத்தன்
சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ் சாத்தன்
வன் புலத்துப் பகடு விட்டு,
குறு முயலின் குழைச் சூட்டொடு
பழஞ் சோற்றுப் புகவு அருந்தி,
........................................................
...........................அரியலாருந்து;
மனைக் கோழிப் பைம் பயிரின்னே,
கானக் கோழிக் கவர் குரலொடு
நீர்க் கோழிக் கூய்ப் பெயர்க்குந்து;
அகல் அள்ளல் புள் இரீஇயுந்து;
ஆங்கு அப் பல நல்ல புலன் அணியும்
சீர் சான்ற விழுச் சிறப்பின்,
சிறு கண் யானைப் பெறல் அருந் தித்தன்
செல்லா நல் இசை உறந்தைக் குணாது,
நெடுங் கை வேண்மான் அருங் கடிப் பிடவூர்
அறப் பெயர்ச் சாத்தன் கிளையேம், பெரும!
முன் நாள் நண்பகல் சுரன் உழந்து வருந்தி,
கதிர் நனி செ ......................................
மாலை,
தன் கடைத் தோன்றி, என் உறவு இசைத்தலின்,
தீம் குரல்......... கின் அரிக் குரல் தடாரியொடு,
சிறிதும் நில்லான், பெரிதும் கூறான்,
அருங் கலம் வரவே அருளினன் வேண்டி,
...........யென உரைத்தன்றி நல்கி, தன் மனைப்
பொன் போல் மடந்தையைக் காட்டி, 'இவனை
என் போல் போற்று' என்றோனே; அதற்கொண்டு,
அவன் மறவலேனே; பிறர் உள்ளலேனே;
அகன் ஞாலம் பெரிது வெம்பினும்,
மிக வானுள் எரி தோன்றினும்,
குள மீனொடும் தாள் புகையினும்,
பெருஞ் செய் நெல்லின் கொக்கு உகிர் நிமிரல்
பசுங் கண் கருனைச் சூட்டொடு மாந்தி,
'விளைவு ஒன்றோ வெள்ளம் கொள்க!' என,
உள்ளதும் இல்லதும் அறியாது,
ஆங்கு அமைந்தன்றால்; வாழ்க, அவன் தாளே!
சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன்
பெருஞ்சாத்தனை மதுரை நக்கீரர் பாடியது.
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 23:04:31(இந்திய நேரம்)