தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்

சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்
43
நிலமிசை வாழ்நர் அலமரல் தீர,
தெறு கதிர்க் கனலி வெம்மை தாங்கி,
கால் உணவு ஆக, சுடரொடு கொட்கும்
அவிர்சடை முனிவரும் மருள, கொடுந்சிறைக்
5
கூர் உகிர்ப் பருந்தின் ஏறு குறித்து, ஒரீஇ,
தன் அகம் புக்க குறு நடைப் புறவின்
தபுதி அஞ்சிச் சீரை புக்க
வரையா ஈகை உரவோன் மருக!
நேரார்க் கடந்த முரண் மிகு திருவின்
10
தேர் வண் கிள்ளி தம்பி! வார் கோல்,
கொடுமர மறவர் பெரும! கடு மான்
கை வண் தோன்றல்! ஐயம் உடையேன்:
'ஆர் புனை தெரியல் நின் முன்னோர் எல்லாம்
பார்ப்பார் நோவன செய்யலர்; மற்று இது
15
நீர்த்தோ நினக்கு?' என வெறுப்பக் கூறி,
நின் யான் பிழைத்தது நோவாய் என்னினும்,
நீ பிழைத்தாய் போல் நனி நாணினையே;
'தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்கும் செம்மல்
இக் குடிப் பிறந்தோர்க்கு எண்மை காணும்' என,
20
காண்தகு மொய்ம்ப! காட்டினை; ஆகலின்,
யானே பிழைத்தனென்; சிறக்க நின் ஆயுள்
மிக்கு வரும் இன் நீர்க் காவிரி
எக்கர் இட்ட மணலினும் பலவே!
திணையும் துறையும் அவை.
சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தானும் தாமப்பல் கண்ணணும் வட்டுப் பொருவுழி, கை கரப்ப, வெகுண்டு வட்டுக் கொண்டு எறிந்தானை, 'சோழன் மகன் அல்லை, என, நாணியிருந்தானைத் தாமப்பல் கண்ணனார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 23:09:17(இந்திய நேரம்)