பாண்டியன் சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன்
பாண்டியன் சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன்
ஆரம் தாழ்ந்த அணி கிளர் மார்பின்,
தாள் தோய் தடக் கை, தகை மாண் வழுதி!
வல்லை மன்ற, நீ நயந்து அளித்தல்;
தேற்றாய், பெரும! பொய்யே; என்றும்
காய் சினம் தவிராது கடல் ஊர்பு எழுதரும்
ஞாயிறு அனையை, நின் பகைவர்க்கு;
திங்கள் அனையை, எம்மனோர்க்கே.
திணை அது; துறை பூவை நிலை.
பாண்டியன் சித்திரமாடத்துத்
துஞ்சிய நன்மாறனை மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச்
சாத்தனார் பாடியது.
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 23:17:53(இந்திய நேரம்)