முக்காவனாட்டு ஆமூர் மல்லன்
முக்காவனாட்டு ஆமூர் மல்லன்
இன் கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்,
மைந்துடை மல்லன் மத வலி முருக்கி,
ஒரு கால் மார்பு ஒதுங்கின்றே; ஒரு கால்
வரு தார் தாங்கிப் பின் ஒதுங்கின்றே
நல்கினும் நல்கான் ஆயினும், வெல் போர்ப்
பொரல் அருந் தித்தன் காண்கதில் அம்ம
பசித்துப் பணை முயலும் யானை போல,
களம் புகு மல்லற் கடந்து அடு நிலையே.
திணை தும்பை; துறை எருமை
மறம்.
சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி
முக்காவனாட்டு ஆமூர் மல்லனைப் பொருது அட்டு நின்றானைச்
சாத்தந்தையார் பாடியது.
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 23:25:57(இந்திய நேரம்)