தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வாட்டாற்று எழினியாதன்

வாட்டாற்று எழினியாதன்
396
கீழ் நீரான் மீன் வழங்குந்து;
மீ நீரான், கண் அன்ன, மலர் பூக்குந்து;
கழி சுற்றிய விளை கழனி,
அரிப் பறையான் புள் ஓப்புந்து;
5
நெடுநீர் கூஉம் மணல் தண் கான்
மென் பறையான் புள் இரியுந்து;
நனைக் கள்ளின் மனைக் கோசர்
தீம் தேறல் நறவு மகிழ்ந்து,
தீம் குரவைக் கொளைத் தாங்குந்து;
10
உள் இலோர்க்கு வலி ஆகுவன்,
கேள் இலோர்க்குக் கேள் ஆகுவன்,
கழுமிய வென் வேல் வேளே,
வள நீர் வாட்டாற்று எழினியாதன்;
கிணையேம், பெரும!
15
கொழுந் தடிய சூடு என்கோ?
வள நனையின் மட்டு என்கோ?
குறு முயலின் நிணம் பெய்தந்த
நறு நெய்ய சோறு என்கோ?
திறந்து மறந்த கூட்டுமுதல்
20
முகந்து கொள்ளும் உணவு என்கோ?
அன்னவை பல பல
...................................................ருநதய
இரும் பேர் ஒக்கல் அருந்து எஞ்சிய
அளித்து உவப்ப, ஈத்தோன் எந்தை;
25
எம்மோர் ஆக்கக் கங்குண்டே;
மாரி வானத்து மீன் நாப்பண்,
விரி கதிர வெண் திங்களின்,
விளங்கித் தோன்றுக, அவன் கலங்கா நல் இசை!
யாமும் பிறரும் வாழ்த்த, நாளும்
30
நிரைசால் நன் கலன் நல்கி,
உரை செலச் சிறக்க, அவன் பாடல்சால் வளனே!
திணையும் துறையும் அவை.
வாட்டாற்று எழினியாதனை மாங்குடி கிழார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 23:27:20(இந்திய நேரம்)