தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வேந்துடைத் தானை முனை கெட

வேந்துடைத் தானை முனை கெட
330
வேந்துடைத் தானை முனை கெட நெரிதர,
ஏந்து வாள் வலத்தன் ஒருவன் ஆகி,
தன் இறந்து வாராமை விலக்கலின், பெருங் கடற்கு
ஆழி அனையன்மாதோ என்றும்
5
பாடிச் சென்றோர்க்கு அன்றியும், வாரிப்
புரவிற்கு ஆற்றாச் சீறூர்த்
தொன்மை சுட்டிய வண்மையோனே.
திணையும் துறையும் அவை.
மதுரைக் கணக்காயனார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:10:34(இந்திய நேரம்)