தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

..........டை முதல் புறவு

..........டை முதல் புறவு
328
..........டை முதல் புறவு சேர்ந்திருந்த
புன் புலச் சீறூர், நெல் விளையாதே;
வரகும் தினையும் உள்ளவை எல்லாம்
இரவல் மாக்களுக்கு ஈயத் தொலைந்தன;
5
................. டு அமைந்தனனே;
அன்னன் ஆயினும், பாண! நன்றும்
வெள்ளத்திடும் பாலுள் உறை தொட....
களவுப் புளி அன்ன விளை....
..............வாடு ஊன் கொழுங் குறை
10
கொய் குரல் அரிசியொடு நெய் பெய்து அட்டு,
துடுப்பொடு சிவணிய களிக் கொள் வெண் சோறு
உண்டு, இனிது இருந்த பின்
... ... ... ... .... ... தருகுவன் மாதோ
தாளி முதல் நீடிய சிறு நறு முஞ்ஞை
15
முயல் வந்து கறிக்கும் முன்றில்,
சீறூர் மன்னனைப் பாடினை செலினே.
திணையும் துறையும் அவை.
பங்கு ............................. பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:11:21(இந்திய நேரம்)