தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கள்ளின் வாழ்த்தி, கள்ளின் வாழ்த்தி,

கள்ளின் வாழ்த்தி, கள்ளின் வாழ்த்தி,
316
கள்ளின் வாழ்த்தி, கள்ளின் வாழ்த்தி,
காட்டொடு மிடைந்த சீயா முன்றில்,
நாட் செருக்கு அனந்தர்த் துஞ்சுவோனே.
அவன் எம் இறைவன்; யாம் அவன் பாணர்;
5
நெருநை வந்த விருந்திற்கு மற்றுத் தன்
இரும் புடைப் பழ வாள் வைத்தனன்; இன்று இக்
கருங் கோட்டுச் சீறியாழ் பணையம்; இது கொண்டு
ஈவதிலாளன் என்னாது, நீயும்,
வள்ளி மருங்குல் வயங்கு இழை அணிய,
10
கள்ளுடைக் கலத்தேம் யாம் மகிழ் தூங்க,
சென்று வாய் சிவந்து மேல் வருக
சிறு கண் யானை வேந்து விழுமுறவே.
திணையும் துறையும் அவை.
மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:15:45(இந்திய நேரம்)