தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நீருள் பட்ட மாரிப்

நீருள் பட்ட மாரிப்
333
நீருள் பட்ட மாரிப் பேர் உறை
மொக்குள் அன்ன பொகுட்டு விழிக் கண்ண,
கரும் பிடர்த் தலைய, பெருஞ் செவிக் குறு முயல்
உள் ஊர்க் குறும் புதல் துள்ளுவன உகளும்
5
தொள்ளை மன்றத்து ஆங்கண் படரின்,
'உண்க' என உணரா உயவிற்று ஆயினும்,
தங்கினிர் சென்மோ, புலவிர்! நன்றும்;
சென்றதற் கொண்டு, மனையோள் விரும்பி,
வரகும் தினையும் உள்ளவை எல்லாம்
10
இரவல் மாக்கள் உணக்கொளத் தீர்ந்தென,
குறித்து மாறு எதிர்ப்பை பெறாஅமையின்,
குரல் உணங்கு விதைத் தினை உரல் வாய்ப் பெய்து,
சிறிது புறப்பட்டன்றோ இலளே; தன் ஊர்
வேட்டக் குடிதொறும் கூட்டு
15
.............................................. உடும்பு செய்
பாணி நெடுந் தேர் வல்லரோடு ஊரா,
வம்பு அணி யானை வேந்து தலைவரினும்,
உண்பது மன்னும் அதுவே;
பரிசில் மன்னும், குருசில் கொண்டதுவே.
திணையும் துறையும் அவை.
.................................................................

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:43:08(இந்திய நேரம்)