தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வயலைக் கொடியின்

வயலைக் கொடியின்
305
வயலைக் கொடியின் வாடிய மருங்குல்,
உயவல் ஊர்தி, பயலைப் பார்ப்பான்
எல்லி வந்து நில்லாது புக்கு,
சொல்லிய சொல்லோ சிலவே; அதற்கே
5
ஏணியும் சீப்பும் மாற்றி,
மாண் வினை யானையும் மணி களைந்தனவே.
திணை வாகை; துறை பார்ப்பன வாகை.
மதுரை வேளாசான் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 02:03:53(இந்திய நேரம்)