தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நாவல்பழம்

நாவல்பழம்
177
ஒளிறு வாள் மன்னர் ஒண் சுடர் நெடு நகர்,
வெளிறு கண் போகப் பல் நாள் திரங்கி,
பாடிப் பெற்ற பொன் அணி யானை,
தமர்எனின், யாவரும் புகுப; அமர் எனின்,
5
திங்களும் நுழையா எந்திரப் படு புழை,
கள் மாறு நீட்ட நணி நணி இருந்த
குறும் பல் குறும்பின் ததும்ப வைகி,
புளிச் சுவை வேட்ட செங் கண் ஆடவர்
தீம் புளிக் களாவொடு துடரி முனையின்,
10
மட்டு அறல் நல் யாற்று எக்கர் ஏறி,
கருங் கனி நாவல் இருந்து கொய்து உண்ணும்,
பெரும் பெயர் ஆதி, பிணங்குஅரில் குட நாட்டு,
எயினர் தந்த எய்ம் மான் எறி தசைப்
பைஞ் ஞிணம் பெருத்த பசு வெள் அமலை,
15
வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய,
இரும் பனங் குடையின் மிசையும்
பெரும் புலர் வைகறைச் சீர் சாலாதே.
திணையும் துறையும் அவை.
மல்லிகிழான் காரியாதியை ஆவூர் மூலங்கிழார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 02:39:15(இந்திய நேரம்)