தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இந்திரன் கோயில் பற்றிய குறிப்பு

இந்திரன் கோயில் பற்றிய குறிப்பு
241
'திண் தேர் இரவலர்க்கு, ஈத்த, தண் தார்,
அண்டிரன் வரூஉம்' என்ன, ஒண் தொடி
வச்சிரத் தடக் கை நெடியோன் கோயிலுள்,
போர்ப்புறு முரசம் கறங்க,
5
ஆர்ப்பு எழுந்தன்றால், விசும்பினானே.
திணையும் துறையும் அவை.
அவனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.
புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 03:26:32(இந்திய நேரம்)