Primary tabs
திருவள்ளுவமாலை
குறுகத் தறித்த குறள்
குறுகத் தறித்த குறள்
ஆனா அறமுதலா அந்நான்கும் - ஏனோருக்(கு)
ஊழின் உரைத்தாற்கும் ஒண்ணீர் முகிலுக்கும்
வாழிஉலகு என்ஆற்று மற்று
தெரிந்து திறந்தொறும் சேரச் - சுருங்கிய
சொல்லால் விரித்துப் பொருள்விளங்கச் சொல்லுதல்
வல்லார்ஆர் வள்ளுவரல் லால்.
பாயிரத்தி னோடு பகர்ந்ததன்பின் - போயொருத்தர்
வாய்க்கேட்க நூலுளவோ மன்னு தமிழ்ப்புலவ
ராய்க்கேட்க வீற்றிருக்க லாம்.
தெள்ளுத லன்றே செயற்பால - வள்ளுவனார்
முப்பாலின் மிக்க மொழியுண் டெனப்பகர்வார்
எப்பா வலரினும் இல்.
சிறுகருந்தும்பியார்
வேதப் பொருளாய் மிகவிளங்கித் தீதற்றோர்
உள்ளுதொ றுள்ளுதொறு உள்ளம் உருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு.
இல்லாத எப்பொருளும் இல்லையால் - சொல்லால்
பரந்தபா வால்என் பயன்வள் ளுவனார்
சுரந்தபா வையத் துணை.
புலவர் திருவள் ளுவர்அன்றிப் பூமேல்
சிலவர் புலவர்எனச் செப்பல் - நிலவு
பிறங்கொளிமா லைக்கும் பெயர்மாலை மற்றும்
கறங்குஇருள்மா லைக்கும் பெயர்.
செங்குன்றூர் கிழார்