தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pazamozhi Naanooru


மிகைப் பாடல்கள்
அருளுடைமை, கொல்லாமை, ஐந்து அடக்கல், வாய்மை,
இருள் அடையாக் கல்வியொடு, ஈகை, புரை இல்லா
உள்ளத்தில் தீர்த்தம் இவை உளவாகப் பெற்றால்,-
வெள்ளத்தில் தீர்த்தம் மிகை.
(புறத்திரட்டு-146)
'அமையப் பொருள் இல்லார் ஆற்றாதார்' என்பது
இமையத்து அனையார்கண் இல்லை;-சிமைய
நகை ஏர் இலங்கு அருவி நல் வரை நாட!
நகையேதான் ஆற்றுவிடும்.

(புறத்திரட்டு-1107)
அறியாமையோடு இளமை ஆவதாம்; ஆங்கே,
செறியப் பெறுவதாம் செல்வம்;-சிறிய
பிறைபெற்ற வாணுதலாய்!-தானே ஆடும் பேய்,
பறைபெற்றால் ஆடாதோ, பாய்ந்து?

(புறத்திரட்டு-1139)

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:50:16(இந்திய நேரம்)