தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Yasodara Kavium



- 146 -

அருளுக என்றாள் -  இதனைத் தெரிவிப்பாயாக‘ என்று வேண்டினாள்; (எ-று.)

அமிர்தமதி தனித்திருந்த காலத்தில் உயிர்த்தோழி அவளை நெருங்கி, ‘நீ தனித்து வருந்தக் காரணம் யாது?‘ என்று வினவினாள் என்க.

‘துணைமுலை’ என்பது பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழிக்தொகை.  ‘இருந்தினன்‘  என்பது முற்றெச்சம்.                 (24)

அரசி தன் கருத்தினைக் குறிப்பாகத் தெரிவித்தல்

97.
தவழுமா மதிசெய் தண்டார் மன்னவன் றகைமை யென்னுங்
 
கவளமா ரகத்தென் னுள்ளக் கருங்களி மதநல் யானை
 
பவளவய் மணிக்கை கொண்ட பண்ணிய றோட்டி பற்றித்
 
துவளுமா றொருவ னெல்லி தொடங்கின னோவ வென்றாள்.

(இ-ள்.) ‘எல்லி - கடந்த இரவில், ஒருவன்- --,  பவள வாய் -(தன்னுடைய) சிவந்த வாயாகிய, மணிக் கைகொண்ட -அழகிய கையிடத்தே பிடித்துள்ள,  பண் இயல்-கீதத்தா லியன்ற, தோட்டிபற்றி -அங்குசத்தைக்கொண்டு, தவழும் மாமதி செய் தண்தார் - ஊர்ந்து  செல்லுகின்ற சிறந்த சந்திரனைப் போனற் குளிர்ச்சியுடைய மலர்மாலை யணிந்த,  மன்னவன் - யசோதர மன்னனது,   தகைமை என்னும் - பெருந்தகைமை யென்கின்ற, கவளம் ஆர்-கவளத்தை விரும்புயுண்ணுகின்ற,    அகத்து   - இடத்தையுடைய, என் உள்ளம்-என் மனமாகிய,கருங் களி மத நல் யானை -கருநிறமுடையதும் களிப்பிற்குக் காரணமான மதத்தையுடையதும் ஆகிய யானை, நோவ  துவளுமாறு -துன்புற வாடும்படி,  தொடங்கினன்  என்றாள்  -ஆரம்பித்தான்‘  என்றாள்; (எ-று.)

அமிர்தமதி ‘ஒருவன் என் மனமாகிய யானையைத் தன் கீத மென்னும்  அங்குசத்தால்  துன்புறுத்தத் தொடங்கினான்‘  என்று  தோழியிடம் கூறினா  னென்க.




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:08:07(இந்திய நேரம்)