தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU


பதிப்புரை  

காவியம் என்றவுடனே கம்பராமாயணந்தான் அனைவர் நினைவுக்கும் வரும்
வகையில் நிலைமை வளர்ந்தோங்கியுள்ள தமிழகத்தில், காவியம் என்றவுடனே அது
இராவண காவியம் என்று கூறும் நிலைக்கு மாற்றங் கண்டிருக்கின்றோம்.

இதுவே பெரும் வெற்றிதான்,

இராவண காவியம், தமிழகக் காண்டம்; இலங்கைக் காண்டம்; விந்தக் காண்டம்;
பழிபுரி காண்டம்; போர்க் காண்டம் என்னும் அய்ந்து காண்டங்களைக் கொண்டு
திகழ்கின்றது.

தமிழகக் காண்டம் எட்டுப் படலங்களையும்; இலங்கைக் காண்டம் எட்டுப்
படலங்களையும்; விந்தக் காண்டம் பதினொரு படலங்களையும்; பழிபுரி காண்டம்
பன்னிரண்டு படலங்களையும்; போர்க் காண்டம் பதினெட்டுப் படலங்களையும்
கொண்டு திகழ்கின்றது.

தமிழகக் காண்டம் நானூற்று அய்ம்பத்து நான்கு பாட்டுகளையும்; இலங்கைக்
காண்டம் அய்ந்நூற்றிருபத்து நான்கு பாட்டுக்களையும்; விந்தக் காண்டம்
அறுநூற்றைம்பத்தாறு பாட்டுக்களையும்; பழிபுரி காண்டம் அறுநூற்று முப்பத்தாறு
செய்யுள்களையும்; போர்க் காண்டம் எண்ணூற்று முப்பது பாடல்களையும் ஆக
மூவாயிரத்து நூறு பாடல்கள் பாடப் பெற்றுளது இந்நூலில்.

இந்நூலுள் அறுசீர் விருத்தம்; அறுசீர்க் கட்டளை விருத்தம்; எழுசீர் விருத்தம்;
எண்சீர் விருத்தம்; கலி விருத்தம்; கலித்துறை: வஞ்சி விருத்தம்; வஞ்சித் துறை;
கொச்சகம் ஆகிய பாவினங்கள் கையாளப் பெற்றுள்ளன.

பாவேந்தர் பாரதிதாசன்; பேரறிஞர் அண்ணா; முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய
அறிஞர் பெருமக்கள் அணிந்துரை வழங்கியுள்ளனர்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 13:36:48(இந்திய நேரம்)