Primary tabs
உ
சிவமயம்
திருஞானசம்பந்த நாயனார் புராணத்தைப் பற்றிய
சில குறிப்புகள்
(இவை வித்வான் திரு.வி. M ராஜமாணிக்கம் பிள்ளை, M.O.L., L.T., அவர்கள் அன்புடன் அனுப்பிய குறிப்புக்களுட் கண்டவை.) திருஞானசம்பந்த நாயனார் வரலாறு பற்றிய கல்வெட்டுக்கல் இல்லை; அவர்பெயராற் பிற்காலச் சோழர் காலத்தில் மடங்கள், தோட்டங்கள் முதலியவை வழங்கி வந்தன என்பதும், சில தானங்கள் விடப்பட்டன என்பதும் தெரியவருகின்றன. (1) சீகாழியில் "ஆளுடைய பிள்ளையார் திருமாளிகையில் தமிழ் விரகர் கண்டு, இக்கோயில் திருக்கைக்கோட்டியில் எழுந்தருளியிருக்கிற முறைகள் திருக்காப்பு நீக்கி அழிவுள்ளன எழுந்தருளுவித்தும், திருமுறைகள் பூசித்தும் இருக்கைக்கு இவ்வூர் இ றையிலியாக விட்ட நிலம்......." என்பது II குலோத்துங்கள் - 1-ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (381 - 1918);--(2) அம்மன்னரது 10-வது ஆட்சியாண்டு :-- "திருஞான சம்பந்தருக்குப் பால் போனகத்திற்கு நிலம் விடப்பட்டது"(374 ஷீயீ 1918):-- (3) அம் மன்னர் 12-வது ஆட்சியாண்டு :-- ஆளுடைய பிள்ளையார் கோயிலில் எழுந்தருளுவித்த மங்கையர்க்கரசி நாச்சியாருக்கு நிவேதனத்துக்கு வீரசோழ நல்லூரில் நிலம் விடப்பட்டது (375 ஷீயீ 1918) [குறிப்பு: இந்த இரண்டாம் குலோத்துங்கர் தாம் அநபாயர் என்ற மன்னர் என்றும், சேக்கிழார் பெருமான் காலத்தவர் என்றும் அறியப்படுபவர்);- (4) II இராஜாதிராஜன் - ஆட்சி 11-வது ஆண்டு - ஆளுடைய பிள்ளையார் கறியமுதுக்குப் பயறு கொடுக்க நிலம் விடப்பட்டது (379 of 1918) :- (5) III குலோத்துங்கர் - ஆட்சி 6-வது ஆண்டு - இராஜ விச்சாதரி என்பவள் ஆளுடைய பிள்ளையாரை (புதிதாக) எழுந்தருளச் செய்தாள் (361 of 1918) ;- (6) குரத்தி ஓட (திருஞான சம்பந்தர் புராணம் 639 = 2536) குரத்தியர் - சமணப் பெண்துறவிகள்; இவர்களுக்குத் தனி மடம் உண்டு. I பராந்தகன் காலத்தில் விளாப்பாக்கத்தில் குரத்தியர் மடம் இருந்தது. அதன் தலைவியார் பத்தினிக் குரத்தியடிகள் என்பவர் (53 -1900); வெடிலில் இருந்த மடத்தில் 400 பேருக்கு மேற்பட்ட குரத்தியர் இருந்தனர் (S.S.I.