தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


 
வெள்ளை ஒரு சாவலைத்தான்
வெள்ளி நல்ல கிழமையிலே
நள்ளிரவு வேளையிலே
நடுச்சாம நேரத்திலே
மன்னவனே கேக்குராண்டா
மாதர் துன்பம் தீர்ப்பதற்கு
இன்னையிலே இருந்து
வன்பிணிகள் தீர்ப்பதற்கு
கொடுத்தேன் திருநீறு நான்
கொத்தளத்து வாழ் கறுப்பன்
நெற்றியிலே நீறு பூசி
நினைந்து வா எத்தனைத்தான்
உந்தன் நோய் அகற்றி வாரேன்
உண்மையுள்ள கறுப்பனிப்போ
சொன்னபடி நடந்தாயானால்
துன்ப வினை தீர்த்துத்தாரேன்
என்னப்பா மன்னவனே
இதற்கும் பதில் கேளு
எந்தனுடன் அட்சரத்தை
ஏழை வரிந்து தாரேன்
மண்டலத்துப் பூசைக்குத்தான் மங்கை
எந்தனுக்குப் பூசை செய்ய
ஏழை கொடுத்தாயானால்
முக்காலும் சத்தியமாய்
முன்னின்று காத்துத்தாரேன்,


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 04:57:47(இந்திய நேரம்)