தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


மாலுக்கடை

உழவன் விளைவிக்கும் பண்டங்களின் விலையைப் பெரிய வியாபாரிகளும், வர்த்தகச் சூதாடிகளும் குறைத்து விடுகிறார்கள். அதனால் எவ்வளவு நன்றாக மேனி கண்டாலும் விவசாயிக்கு பணம் மிஞ்சுவதில்லை.

மாலுக்கடை, கமிஷன் வியாபாரிக்கடை, அவர்களுடைய வியாபாராத்தால் பாதிக்கப்பட்ட விவசாயி, மாலுக்கடையை ஏன் கடவுள் படைத்தார் என்று கேட்கிறான். இது முதலாளித்துவ அமைப்பின் சுரண்டல் இயந்திரத்தின் ஒருபகுதி என்று அவனால் உணர முடியவில்லை.கடைதான் அவனை மோசம் செய்வதாக அவன் எண்ணுகிறான்.

களையெடுக்கும் கடமங்குளம்
கணக்கெழுதும் ஆலமரம்
விலை பேசும் மாலுக்கடை
விதிச்சாரே உடையாளி
தரகருக்கும் தட்டப் பாறை
போட்டுக் கட்டும் பொன்னிலுப்பை
விலைபேசும் மாலுக்கடை
விதிச்சாரே உடையாளி

வட்டார வழக்கு: விதிச்சாரே-விதித்தாரே ; மாலுக்கடை-கமிஷன் கடை.

சேகரித்தவர் :
S.M. கார்க்கி

இடம்:
சிவகிரிவட்டாரம்,
நெல்லைமாவட்டம்.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 05:56:43(இந்திய நேரம்)