தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


நானும் உழைத்தேன்

கத்திரியும் பாவையும்
கலந்தேன் ஒரு பாத்தி
கருணன் உடன் பிறந்து-நான்
கசந்தேன் பிறந்தெடத்த
வெள்ளரியும் பாவையும்
வெதச்சேன் ஒரு பாத்தி
வீமன் உடன் பிறந்து-நான்
வெறுத்தேன் பிறந்தெடத்தெ
வெள்ளைத் துகிலுடுத்தி-நான்
வீதியில போனாக்க
வெள்ளாளன் பிள்ளையென்பார்
வீமனோட தங்கையென்பார்

இளமையில் தாய், தகப்பன், சகோதரர்களோடு இவளும் பிறந்த வீட்டு வயலில் பாத்திகட்டி கத்திரிச் செடியும் பாகைச் செடியும் பயிர் செய்து பாடுபட்டிருக்கிறாள். ஆனால் விதவையாகி பிறந்த வீட்டுக்குப் போனால், வெள்ளாளன் மகள், வீமன் தங்கை என்று ஊரார் அடையாளம் கண்டு கொள்ளுவார்கள். ஆனால் பிறந்த வீட்டில் தங்கி வாழ முடியுமா?



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 05:59:53(இந்திய நேரம்)