தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


இங்கிலீசுக்காரியாலே
இறந்தாரே நம்ம துரை

சிவகிரி ஜமீன்தார் ஒரு இங்கிலீஷ்காரியின் உறவால் நோய்வாய்ப்பட்டுக் கடைசியில் இறந்து போனார். அவளுக்கு ராணிப்பட்டம் வேண்டும் என்று கேட்டாளென்றும், அது முறையல்லவென்று சொன்ன பின்பு அவள் கோபித்தாளென்றும் இப்பாடல் கூறுகிறது. அவருடைய மறைவுக்கு வருத்தம் தெரிவிப்பதோடு வருங்கால ஜமீன்தாருக்குப் புத்தியும் புகட்டுகிறது இப்பாட்டு.

கண்ணு முழியழகர்
கருப்புக் கோட்டித் தானழகர்
பூடுசுக் காலழகர்-இந்தப்
பூலோகம் எல்லாம் கண்டதில்லை
சிவகிரி மகாராஜா-நம்ம
செல்லத்துரைப் பாண்டியர்
தங்கக் குணக்காரர்-அவர்
எங்கும் புகழானவர்
பந்தயக் குதிரை ஏறி-அவர்
பட்டணங்கள் சுத்தையிலே
எதிர்பார்த்த பெண்கள்-அதை
எண்ணவும் முடியாதய்யா
சிவகிரி மகாராஜா-நம்ம
செல்லத்துரைப் பாண்டியர்
தங்கக் குணக்காரர்-அவர்
எங்கும் புகழானவர்
ஏழாம் திருநாளாம்
எண்ணக் காம்பு மண்டபமாம்
கண்ணாடிச் சப்பரத்தை-நம்மதுரை
கண் குளிரப் பார்க்கலாமே
சிவகிரி மகாராஜா-நம்ம
செல்லத் துரைப் பாண்டியர்
தங்கக் குணக்காரர்-அவர்
எங்கும் புகழானவர்
ஐயா வட புறமாம்
அம்மையாத்தா தென் புறமாம்
ஊடே வர குணராம்
உயர்ந்ததொரு கோபுரமாம்
சிவகிரி மகாராஜா-நம்ம
செல்லத்துரைப் பாண்டியர்
ஈசன் விதியாலே
மோசம் வரலாச்சுதே
சென்ட்ரல் ஆஸ்பத்திரியில்-அவர்
சீக்காய் இருக்கையிலே
பட்டணத்து டாக்டரும்
பாங்குடனே வந்தல்லவோ



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 06:04:53(இந்திய நேரம்)