Primary tabs
முகவுரை
இல்லறமாகிய நல்லறம் பூணும் மக்கள் வாழ்க்கையில் திருமணமே தலைசிறந்த மங்கல நிகழ்ச்சியாதலாலும், நீண்ட காலமாகத் தமிழுக்கும் தமிழனுக்கும் இழுக்குநேரும் வண்ணம் ஆரியமுறையில் பெரும்பால் தமிழ மணங்கள் நடைபெற்று வருவதாலும், அண்மையில் யான் நடத்திவைத்த பல திருமணங்களில் யான் உணர்ந்த குறையை நிறைத்தற் பொருட்டும், இந் நூல் எழுதப்பெற்றது.