Primary tabs
காந்தியுகக் கவிஞர்
உயர்திரு. நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை
அவர்களின்
வாழ்த்து
மகிழ்வுடன் குலவிடவும்
போர்பயம் நீங்கிடவும்-மனிதப்
பொறுப்புகள் ஓங்கிடவும்
மதவெறி மொழிவெறியும்-மற்றும்
இனவெறி அழிவுறவும்
அன்பறம் செழித்திடவும்-கெட்ட
அகந்தையை அழித்திடவும்
சாந்த குணம்வேண்டும்-அத்துடன்
சத்திய மணம்வேண்டும்.
அத்தகு நல்லறிவை-எளிதில்
அளித்திட வல்லதெனும்
பள்ளிப் படிப்பினையே-இளைஞர்கள்
பயின்றிடக் கொடுப்ப துவாய்
கதைகளைச் சொல்வதுவே-மிக்க
களிப்புள கல்வியதாம்.
அதற்குள சிறந்தகதை-காந்தி
அண்ணல் பிறந்தகதை.
காந்தியின் சரித்திரந்தான்-சிறந்த
கல்வியை விரித்துரைக்கும்.