1900
    : 
    சென்னை மயிலாப்பூரில் சீனிவாச நாயகர் - தாயரம்மாள் இணையருக்கு 6.12.1900 
      அன்று பிறந்தார். 
   
  
    1920
    : 
    சென்னைக் கலைக் கல்லூரியில் ஓவியம் பயிலுவதற்காகச் சேர்ந்து தொடரவில்லை. 
      திருமணமின்றி வாழ்ந்தார்.
   
  
    1922
    : 
    1921-இல் தந்தையும், தமையன் கோவிந்தராஜனும் மறை வுற்றனர். இச் சூழலில் குடும்பத்தைக் 
      காப்பாற்ற பணிக்குச் செல்லத் தொடங்கினார். 1922-23இல் நீதிக்கட்சி நடத்திய 
      திராவிடன் நாளிதழில் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றார்.
   
  
    1923-27
    : 
    சென்னையிலிருந்து வெளிவந்த லக்ஷ்மி என்ற இதழில் பல்வேறு செய்திகளைத் தொகுத்து 
      கட்டுரைகள் எழுதிவந்தார்.
   
  
    1930
    : 
    மயிலாப்பூர் நகராட்சிப் பள்ளியில் தொடக்கநிலை ஆசிரியராகப் பணியேற்றார்.
   
  
    1931-32
    : 
    குடியரசு இதழ்ப் பணிக் காலத்தில் பெரியார் ஈ.வெ.ரா. வுடன் தொடர்பு. சுயமரியாதை 
      தொடர்பான கட்டுரைகள் வரைந்தார். 
   
  
     
     
    1931-இல் கல்வி மீதான அக்கறை குறித்து ஆரம்பக் கல்வி குறித்தும், பொதுச் 
      செய்திகள் பற்றியும் ‘ஆரம்பாசிரியன்’ என்னும் இதழில் தொடர்ந்து எழுதியுள்ளார்.
   
  
     
     
    1934-38-இல் வெளிவந்த ஊழியன் இதழிலும் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
   
  
    1936
    : 
    அறிஞர் ச.த. சற்குணர், விபுலானந்த அடிகள், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் ஆகிய 
      அறிஞர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார். 
   
  
    1955
    : 
    16.12.1955-இல் அரசுப் பணியிலிருந்து பணி ஓய்வு பெற்றார். 
   
  
    1961
    : 
    17.3.1961-இல் மணிவிழா - மற்றும் மலர் வெளியீடு.
   
  
    1975-1979
    :
	தமிழ்நாட்டு வரலாற்றுக்குழு உறுப்பினர்.
   
  
    1980
    : 
    8. 5. 1980-இல் மறைவுற்றார்.
   
  
    2001
    : 
    நூற்றாண்டுவிழா - ஆக்கங்கள் அரசுடைமை.