Primary tabs


அவர் வெகுள்வரோ எனின்,
"காமர் கடும்புனல்" எனத்தொடங்கும் கலித்தொகைப் பாட்டினுள்,
"அறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட
என்னையர்க் குய்த்துரைத்தாள் யாய்".
(கலித்.39)
எனத் தாய் வெகுளாமை காணப்பட்டது.
"அவரும் தெரிகணை நோக்கிச் சிலைநோக்கிக் கண்சேந்து
ஒருபக லெல்லாம் உருத்தெழுந் தாறி".
(கலித்.39)
என்றதனான் வெகுட்சி பெற்றாம். (48)
137. அம்பலும் அலருங் களவுவெளிப் படுத்தலின்
அங்கதன் முதல்வன் கிழவ னாகும்.
என்றது, களவு வெளிப்படுப்பார் அவர்
என்பது உணர்த்துதல்
நுதலிற்று.
அம்பல் என்பது முகிழ்த்தல்,
அஃது ஒருவரொருவர்
முகக்குறிப்பினாற் றோற்றுவித்தல். அலராவது
சொல்லுதல். அதனானே
இவை இரண்டும் களவினை
வெளிப்படுத்தலின் அதற்குக்
காரணமாவான் தலைவன் என்றவாறு என்னை, அவனையறிந்துழியல்லது
இவை நிகழாமையின் தலைவி வேறுபாட்டான்
ஆகாதோ எனின்,
ஆண்டு எற்றினான் ஆயிற்று என ஐயம்
நிகழ்தலல்லது துணிவு
பிறவாதாம் என்று கொள்க.
(49)
138. வெளிப்பட வரைகல் படாமை வரைதல் என்று
ஆயிரண் டென்ப வரைதல் ஆறே.
இது, வரையும் பகுதி உணர்த்துதல் நுதலிற்று.
களவு வெளிப்பட்டபின்
வரைதலும் களவு வெளிப்படாமை
வரைதலும் என அவ்விரண்டென்று சொல்லுவர்
வரையும் நெறி
என்றவாறு.
இதனால் சொல்லியது இருவாற்றானும் அறன் இழுக்காதென்றவாறு.
அஃது இழுக்காதவாறு வருகின்ற சூத்திரத்தான் உணர்க.
(50)
139. வெளிப்படை தானே கற்பினோ டொப்பினும்
ஞாங்கர்க் கிளந்த மூன்று பொருளாக
வரையாது பிரிதல் கிழவோற் கில்லை.
இது தலைவற்கு உரியதோர் இயல்பு உணர்த்துதல் நுதலிற்று.
களவு வெளிப்படுதல் கற்பினோடோப்பினும்
மேற்சொல்லப்பட்ட
மூன்று பொருளாக வரையாது பிரிதல் கிழவோற்கு இல்லை என்றவாறு.
அவையாவன ‘முற்கூறிய ஓதற்பிரிவும், பகைவயிற்பிரிவும்` தூதிற்
பிரிவும். எனவே பொருள்வயிற் பிரிதலும்
வேந்தர்க் குற்றுழிப்
பிரிதலும் காவற்பிரிதலும் நிகழப்பெறும் என்றவாறாம்.
(51)
கற்பியல்
இவ்வோத்து என்ன பெயர்த்தோவெனின்,
கற்பியல் என்னும்
பெயர்த்து. கற்புக்கு இலக்கணம்
உணர்த்தினமையாற் பெற்ற பெயர்.
கற்பென்பது யாதோவெனின், அஃதாமாறு இச்சூத்திரத்தில் விளங்கும்.
140. கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே.
என்பது சூத்திரம்.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின் கற்பிலக்கணம்
கூறுதல்
நுதலிற்று.
கற்பென்று
சொல்லப்படுவது. கரணத்தொடு
பொருந்திக்
கொள்ளுதற்குரிய மரபினையுடைய
கிழவன் கொள்ளுதற்குரிய
மரபினையுடைய கிழத்தியைக் கொடுத்தற்குரிய
மரபினை யுடையார்
கொடுப்பக் கொள்வது என்றவாறு.
`கொளற்குரிய மரபின்' என்பதனைக்
`கிழத்தி' என்பதனோடுங்
கூட்டி யுரைக்க.
களவின்கண் ஒத்தாரிருவர் வேட்கை மிகுதியாற்கூடி ஒழுகிய வழிக்
கரணத்தின்
அமையாது இல்லறம் நடத்தலாமோ எனின் அஃதாகா
தென்றற்குக் `கரணமொடு
புணர' என்றார். கரணம் என்பது - வதுவைச்
சடங்கு.
`கொளற்குரி மரபிற் கிழவோன். என்றதனால் ஒத்த குலத்தானும்
உயர்ந்த
குலத்தானும் என்று கொள்க. `கொளற்குரி மரபிற் கிழத்தி'
யென்றதனால்,
ஒத்த குலத்தாளும் இழிந்த குலத்தாளும் என்று கொள்க.
`கொடைக்குரி
மரபினோர்' என்றதனால்,
தந்தையும் தாயும்
தன்னையரும் மாதுலனும் இவரில்லாதவழிச்
சான்றோரும் தெய்வமும்
என்று கொள்க. கொடுப்பக்
கொள்வது கற்பு என்றமையால், அது
கொடுக்குங்கால், களவு வெளிப்பட்ட
வழியும், களவு வெளிப்படாத
வழியும், மெய்யுறு புணர்ச்சியின்றி உள்ளப்
புணர்ச்சியான் உரிமைபூண்ட
வழியும் கொள்ளப் பெறும் எனக் கொள்க. களவியற் சூத்திரத்துள்,
"இன்பமும் பொருளு மறனு மென்றாங்
கன்பொடு புணர்ந்த".
(களவியல்-1)
என்பதனைத் தந்துரைத்து, ஐந்திணை மருங்கிற்
கற்பெனப்படுவது
எனக் கூட்டுக.
அஃதேல், கொடுப்பக் கொள்வது கற்பாயின் பிரமம் முதலிய எண்
வகையும்
கொள்க. `கொடுப்போ ரின்றியும் கரண முண்டே-புணர்ந்துடன்
போகிய
காலை யான' என்னும் இது கற்பாகுமோ எனின், அவையும்
கற்பாதல்
ஒக்குமேனும் கந்திருவம்போல ஒத்த அன்புடையார் ஆகல்
ஒருதலையன்மையின்
கைக்கிளை பெருந்திணைப்பாற் படும். ஈண்டு
ஐந்திணை
தழுவிய அகத்திணையே களவு கற்பு எனப் பகுத்தார்
என்று
கொள்க.
(1)
141. கொ