Primary tabs

வுயர்திணை மேன.
இச் சூத்திரம் என்னுதலிற்றோவெனின், இதுவும் உயர்திணையான்
முடியாத, அஃறிணையான் முடியும் என்பது உணர்த்துதல் நுதலிற்று.
உரை: காலம், உலகம் என்றித் தொடக்கத்தனவும் உயர்திணை
யெனினும் உயர்திணைப் பால் பிரிந்து இசையா ; அஃறிணையான்
இசைக்கும் என்றவாறு.
வரலாறு:
இவற்குக் காலம் ஆயிற்று : . . . . . . காலம்.
உலகம் பசித்தது : . . . . . . . . . உலகம்.
உயிர் போயிற்று : . . . . . . . . . உயிர்.
உடம்பு நன்று : . . . . . . . . . உடம்பு.
* இவற்குத் தெய்வம் ஆயிற்று : . . . . . . தெய்வம்.
இவ் வினை நன்று : . . . . . . . . . வினை.
இவனைப் பூதம் புடைத்தது : . . . . . . பூதம்.
ஞாயிறு எழுந்தது : . . . . . . . . . ஞாயிறு.
திங்கள் எழுந்தது : . . . . . . . . . திங்கள்.
சொல் நன்று : . . . . . . . . . சொல்.
என வரும்.
‘பிறவும்’ என்றதனால், ‘வெள்ளி எழுந்தது, செவ்வாய் எழுந்தது’
என்பன கொள்க.
* ‘இவற்குப் பால் ஆயிற்று’ எனவுமாம்.
இச் சூத்திரந் தெய்வஞ் சுட்டிய பொருள் அஃறிணையான்
முடிபேற்றல் கூறினார் என்ப ஒரு திறத்தார். அற்றன்று, ஈண்டுத்
தெய்வமும் உள, மக்களும் உளர் ; இனி, மேற் சூத்திரம், ‘முன்னர்த்
தான் உணரப்படும்’ என்றவாறு கூறினார், இச் சூத்திரம்
உயர்திணைப்பொருளே அஃறிணை முடிபு ஏற்பனவற்றிற்குக் கூறினார்
என்பது.
உலகம் என்பது உலகத்தார் மேற்று ; உடம்பு என்பது
உடம்புடையார் மேற்று என்பது. (58)
59. நின்றாங் கிசைத்த லிவணியல் பின்றே.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், ‘குடிமையாண்மை’ (கிளவி
57) என்பதற்குப் புறனடை கூறுதல் நுதலிற்று.
உரை: இச் சொல்லப்பட்டவையிற்றுக்கு நின்றாங்கு இசைத்தல்
இயல்பின்று என்பது.
எனவே, மேற் சூத்திரத்திற் சொல்லப்பட்டனவற்றுக்கு நின்றாங்கு
இசைத்தல் இயல்புமாம் என்பது.
வரலாறு: குடிமை நல்லன், வேந்து செங்கோலன் என வரும். (59)
60. இசைத்தலு முரிய வேறிடத் தான.
இச் சூத்திரம் என்னுதலிற்றோவெனின், இது, ‘காலம் உலகம்’
(கிளவி-58) என்பதற்குப் புறனடை உணர்த்துதல் நுதலிற்று.
உரை:
வேறிடம் என்பது வேறு வாய்பாடு ; வேறு வாய்பாட்டாற்
சொல்ல இசைக்கும், ஓதிய வாய்பாட்டாற் சொல்ல இசையாது என்பது.
வரலாறு: காலன் கொண்டான், உலகத்தார்
பசித்தார் என
வரும்.(60)
61. எடுத்த மொழியினஞ் செப்பலு முரித்தே.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், ‘இனச் சுட்டில்லாப்
பண்புகொள் பெயர்க்கொடை’ (கிளவி-18.) என்னும் சூத்திரத்திற்குப்
புறனடை உணர்த்துதல் நுதலிற்று.
உரை: மேற் ‘பண்புகொள் பெயர்க் கொடை’ (கிளவி-18.)
வழக்கினுள் இனம்பெற்றே நிற்க என்றான், இனி இனமின்றியும் நிற்கும்
வழக்கினுள் என்றவாறு.
வரலாறு: பெ