Primary tabs

ஓசையான் ஆம்
தொழிற்பெயரும், ஓசை வேறுபாட்டானன்றி உண்டவன் உண்ணுமது,
என்றாற்போலத் தாமே பெயராய்க் காலந் தோன்றி வினைமுதன்மேல்
நிற்குந் தொழிற்பெயரும், ‘கொலைவர் கொடுமரம் தேய்த்தார்’(கலி.12:1.2)
அவன் ஏறிற்றுக் குதிரை என்றாற்போலச் செயப்படுபொருட்கண் காலங்
காட்டி நின்ற தொழிற்பெயரும், யான் சொன்னவன், *‘உண்பது நாழி’
(புறம்.189:5) என்றாற்போலச் செயப்படுபொருண்மேல் பெயராய்க் காலந்
தோன்றி நிற்குந் தொழிற்பெயரும், பிறவாற்றான் வரும் பெயர்
வேற்றுமையும் உணர்க. (9)
* (பாடம்) உண்பவை.
இரண்டாம் வேற்றுமையின் பொருள்
72.
இரண்டா குவதே,
ஐயெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
எவ்வழி வரினும் வினையே வினைக்குறிப்பு
அவ்விரு முதலின் தோன்றும் அதுவே.
இது முறையே இரண்டாவது இப்பொருட்கண் வரும் என்கின்றது.
(இ-ள்.) ஐ எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
இரண்டாகுவதே-‘பெயர் ஐ ஒடு கு இன் அது கண்’ (65) என்னும்
சூத்திரத்து ஐ எனப் பெயர் பெற்ற வேற்றுமைச்சொல் இரண்டாவது
ஆம்; அது எவ்வழி வரினும் - அஃது யாண்டு வரினும், வினையே
வினைக் குறிப்பு அவ்விரு முதலின் தோன்றும்-வினைச்சொல்லினும்
வினைக்குறிப்புச் சொல்லினும் பிறந்த செயப்படு பொருளாகிய
அவ்விரண்டு காரணத்தின்கண்ணும் தோன்றும், எ-று.
‘பெயரிய’ என்பது ‘க