தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2364


தோர்     ஆண்டுநின்று   மீண்டுபோய்ப்   பற்றார்  புலத்து  ஒற்றர்
உணராமற்   பிற்றை  ஞான்று  சேறலும்,  நிரைமீட்டற்கு  எழுந்தோர்
ஆண்டு ஒற்றப்படாமற் சேறலும்;

உ-ம்:

‘‘பிறர்புல மென்னார் தமர்புல மென்னார்
விறல்வெய்யோ ராயிருட்கட் சென்றார் - நிரையுங்
கடாஅஞ் செருக்குங் கடுங்களி யானைப்
படாஅ முகம்படுத் தாங்கு’’
(பெரும்பொருள்விளக்கம். புறத்திரட்டு.1240.நிரைகோடல்.9)

‘‘கங்கை பரந்தாங்குக் கானப் பெருங்கவலை
யெங்கு மறவ ரிரைத்தெழுந்தார்-தங்கிளைக்கண்
மன்றுகாண் வேட்கை மடிசுரப்பவேதோன்றும்
கன்றுகாண் மெய்குளிர்ப்பீர் கண்டு.’’   (புறத்திரட்டு.1246)

இவை கண்டோர் கூற்று.

புடைகெட  ஒற்றின்  ஆசிய  வேயே - நுரைகோடற்கு எழுந்தோர்
பகைப்புலத்து   ஒற்றர்   உணராமற்   சென்று   ஒற்றி  அவ்வொற்று
வகையான்  அவர்  உணர்த்திய  குறளைச்  சொல்லும், நிரைமீட்டற்கு
எழுந்தோர்  அங்ஙனம் ஒற்றிய ஒற்றுவகையான் வந்து ஓதிய குறளைச்
சொல்லும்;

உ-ம்:

‘‘ஒருவ ரொருவ ருணராமற் சென்றாங்
கிருவரு மொப்ப விசைந்தார் - வெருவர
வீக்குங் கழற்கால் விறல்வெய்யோர் வில்லோடு
கோக்குஞ் சரந்தெரிந்து கொண்டு.’’

‘‘நெடுநிலை யாயத்து நிரைசுவ டொற்றிப்
படுமணி யாயம் பகர்ந்தோய் - நெடிது
மனக்குரிய காதல் வயவேந்த னென்று
நினக்குரிய வாக நிரை.’’

இவை கண்டோர் கூற்று.

வேய்ப்புறம்     முற்றின்  ஆகிய  புறத்திறை  -  நிரைகோடற்கு
எழுந்தோர்    வேயுரைத்    தோரிடத்துச்    செய்யுஞ்   சிறப்புகள்
முடிந்தபின்னர்   உளதாகிய   நிரைப்புறத்து   ஒடுங்கிய  இருக்கைப்
பகுதியும்,  நிரைமீட்டற்கு  எழுந்தோர்  தமது நிரைப்புறத்துச் சென்று
விரைவொழிந்து இருக்கின்ற இருக்கையும்;

உ-ம்:

‘‘கரந்தியல் காட்டுத்தீப் போலப் பெரிதும்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 23:09:20(இந்திய நேரம்)