தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3173


கலின்.     புணர்தலின்றி    இல்லறம்    நிகழாமையிற்    புணர்தற்
பொருட்டாகிய  குறிஞ்சியை  அதன்பின்  வைத்தார். இதற்குதாரணம்,
‘‘கருங்காற் குறிஞ்சி சான்றவெற் பணிந்து’’என்பது. புணர்ச்சிப்பின்
ஊடல் நிகழ்தலின் அதன்பின் மருதத்தை வைத்தார். ‘மருதஞ்  சான்ற
மருதத்   தண்பணை’  என்புழி,  மருதமென்றது  ஊடியுங்   கூடியும்
போகம்   நுகர்தலை.  பரத்தையிற்  பிரிவு  போலப்  பிரிவொப்புமை
நோக்கி நெய்தலை ஈற்றுக்கண்வைத்தார். நெய்தற் பறையாவது இரங்கற்
பறையாகலின் நெய்தல் இரக்கமாம்.

‘‘ஐதகலல்குல் மகளிர்
நெய்தல் கேளன்மார் நெடுங்கடை யானே’’   
(புறம்.389)

என வரும்.

இனி,     இவ்வாறன்றி  முல்லை முதலிய பூவாற் பெயர் பெற்றன
இவ்வொழுக்கங்களெனின்,  அவ்வந்  நிலங்கட்கு  ஏனைப்  பூக்களும்
உரியவாகலின்  அவற்றாற் பெயர் கூறலும் உரியவெனக் கடாயினாற்கு
விடையின்மை உணர்க.

இதனானே  நடுவுநிலைத்திணை  யொழிந்த  நான்கற்கும் பெயரும்
முறையுங்   கூறினான்.   இந்நான்கும்  உரிப்பொருளாதல்  ‘புணர்தல்
பிரிதல்’   (14)  என்புழிக்  கூறுதும்.  கருப்பொருளாகிய  தெய்வத்தை
முதற்பொருளொடு கூறியது, அவை ‘வந்த நிலத்தின் பயத்த’ வாய் (19)
மயங்குமாறு போல மயங்காது இது வென்றற்கும், கருப்பொருளு
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 01:41:20(இந்திய நேரம்)