தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3274


கதர கானத் தானே’’                    (ஐங்குறு.355)

இவ்  வைங்குறுநூறு  பெற்ற பொருள் கொண்டு நின்னலம் நயந்து
வந்தேன் என்றது. இது

‘‘அளிதோ தானே நாணே யாள்வினை
யெளிதென லோம்பன்மி னறிவுடை யீரே
கான்கெழு செலவின் னெஞ்சுபின் வாங்கத்
தான்சென் றனனே தமிய னதாஅன்
றென்னா வதுகொறானே பொன்னுடை
மனைமாண் டடங்கிய கற்பிற்
புனையீ ரோதி புலம்புறு நிலையே”

இது செலவு கண்டோர் கூறியது.

“மரந்தலை மணந்த நனந்தலைக் கானத்
தலந்தலை ஞெமையத் திருந்த குடிஞை
பொன்செய் கொல்லனி னினிய தெளிர்ப்பப்
பெய்ம்மணி யார்க்கு மிழைகிளர் நெடுந்தேர்
வன்பான் முரம்பி னேமி யதிரச்
சென்றிசின் வாழியோ பனிக்கமு நாளே
யிடைச்சுரத் தெழிலி யுறைத்தென மார்பிற்
குறும் பொறிக் கொண்ட சாந்தமொடு
நறுங்கண் ணியன்கொ னோகோ யானே”
      (நற்.394)

இந் நற்றிணை வரவுகண்டோர் கூறியது.

‘‘இனைந்துநொந் தழுதன ணினைந்துநீ டுயிர்த்தன
ளெல்லையு மிரவுங் கழிந்தன வென்றெண்ணி யெல்லிரா
நல்கிய கேள்வ னிவன்மன்ற மெல்ல
மணியுட் பரந்தநீர் போலத் துணிவாங்
கலஞ்சிதை யில்லத்துக் காழ்கொண்டு தேற்றக்
கலங்கிய நீர்போற் றெளிந்து நலம்பெற்றா
ணல்லெழின் மார்பனைச் சார்ந்து’’
           (கலி.142)

இது பெருந்திணைக்கட் கண்டோர் கூறியது.

‘‘குரவை தழீஇயா மரபுளி பாடித்
தேயா விழுப்புகழ்த் தெய்வம் பரவுதும்
மாசில்வான் முந்நீர் வளைஇய தொன்னிலம்
ஆளுங் கிழமையொடு புணர்ந்த
வெங்கோ வாழியரிம் மலர்தலை யுலகே’’
      (கலி.103)

இச்     சுரிதகத்துக்   குரவையாடல்  ஏறுகோடற்  கைக்கிளையுள்
விராய்வந்தவாறுங்    குரவைக்குரிய   தெய்வத்தையன்றி   அரசனை
வாழ்த்திய  வாழ்த்து  விராய்வந்தவாறுங் கொள்க. ‘விரவும் பொருளும்
விரவு’ மென
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 02:00:31(இந்திய நேரம்)