Primary tabs


ணுந் தோழிகண்ணும் வேறுபாடு கண்டுழித் தனக்குக்
காமங் கயிகந்துழித் தாழ்ந்துகூறுங் கூற்று; காணுங் காலை கிழவோற்கு
உரித்தே - ஆராயும் காலத்துத் தலைவற்கு உரித்து; வழிபடு கிழமை
அவட்கு இயலான - அவனை எஞ்ஞான்றும் வழிபட்டொழுகுதல்
தலைவிக்கு இல்லறத்தொடு பட்ட இயல்பாகலான் எ-று.
உ-ம்:
“ஆயிழாய், நின்கண் பெறினல்லால் இன்னுயிர் வாழ்கல்லா
என்க ணெவனோ தவறு” (கலி.88)
“கடியர்தமக், கியார்சொல்லத் தக்கார் மாற்று” (கலி.88)
“நின்னாணை கடக்கிற்பா ரியார்” (கலி.81)
என்றாற்போல்வன கொள்க.
‘காணுங்காலை’ என்றதனான் தலைவன் தலைவியெதிர் புலப்பது
தன்தவறு சிறிதாகிய இடத்தெனவும், இங்ஙனம் பணிவது தன் தவறு
பெரிதாகிய இடத்தெனவுங் கொள்க. (19)
தலைவன்கண் தலைவியும் பணிந்து கூறுமெனல்
161. அருண்முந் துறுத்த அன்புபொதி கிளவி
பொருள்பட மொழிதல் கிழவோட்கும் உரித்தே.
இது, தலைவன் பணிந்து மொழிந்தாங்குத் தலைவியும் பணிந்து
கூறுமென்கின்றது.
(இ-ள்.) அருள் முந்துறுத்த அன்பு பொதி கிளவி - பிறர்
அவலங் கண்டு அவலிக்கும்அருள் முன் தோற்றுவித்த அவ்வருள்
பிறத்தற்கு ஏதுவாகி எஞ்ஞான்றும் அகத்து நிகழும் அன்பினைக்
கரந்து சொல்லுங் கிளவி; பொருள்பட மொழிதல் கிழவோட்கும்
உரித்தே - பணிந்தமொழி தோற்றாது வேறொரு பொருள்
பயப்பக்கூறுதல் தலைவிக்கும் உரித்து எ-று.
வேறு பொருளாவது தலைவன் கூறியாங்குத் தானும் பணிந்து
கூறுவாள், பணியாதே தன் நெஞ்சு தன்னையுங் கைகடந்து
அவன் ஏவலைச் செய்ததென்றாற்போலக் கூறுதலுமாம்.
இது ‘தன்வயிற் கரத்தலும் அவன்வயின் வேட்டலும்’
(தொல்.பொ.11) எனப் பொருளியலுள் வழுவமைத்தற்கு இலக்கணம்.
“இணையிரண்டு” என்னும் மருதக்கலியுள்,
“மாசற மண்ணுற்ற மணியேசு மிருங்கூந்தல்
வீசேர்ந்து வண்டார்க்குங் கவின்பெறல் வேண்டேன்மன்
நோய்சேர்ந்த திறம்பண்ணி நின்பாணன் எம்மனை
நீசேர்ந்த இல்வினாய் வாரா