அருள்மிகு வைகுண்டப் பெருமாள் திருக்கோயில்
இரண்டாம் நந்திவர்மனால் கி.பி.8-ஆம் நூற்றாண்டில் இக்கோயில் கட்டப்பட்டது. இக்கோயில் பெருமாளுக்காக எடுப்பிக்கப்பட்டதாகும். இக்கோயிலின் திருச்சுற்று மாளிகையில் பல்லவமன்னர்களின் குலமுதல்வர்களின் வரிசைப் பட்டியல் புடைப்புச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. மூன்றுதளங்களைக் கொண்டதாகவும், மூன்று கருவறைகளைக் கொண்டதாகவும் அமைக்கப்பட்ட இக்கோயில் எண்ணிறந்த திருமால் சிற்பங்களைக் கொண்டுள்ள சிற்பக் கருவூலமாகத் திகழ்கின்றது.
- பார்வை 556