Primary tabs
தீன்மதி நாகனார்
சங்கப் புலவர்களுள் நாகன் என்று பெயர் பெற்றுள்ள புலவர்கள் பலர் ஆவர். இவர் ‘ஆர்’ விகுதி பெற்று ‘நாகனார்’ என்று அழைக்கப் பெற்றார். தீன்மிதி என்னும் அடைமொழிக்குக் காரணம் தெரியவில்லை. இவருடைய பெயர் தீன்மிதி நாகன், தீன்மதி நாகனார் தீன்மிதிநாகன், தீமிதி நாகனார், தீமிதிநாகன் எனப் பலப் பதிப்புக்களில் பல வேறுபாடுகளுடன் காணப்படுகிறது. இவர் ஊர் சென்னை. இவருடைய இயற்பெயர் இன்னதென்று தெரியவில்லை. துட்டநிக்கிரக சிரோன்மணி என்பது இவராகப் படைத்திட்டுக் கொண்ட பெயராகும்.
குறுந்தொகையில் 111 எண்ணுள்ள பாடல் ஒன்று மட்டும் இவரது பாடலாகச் சங்க நூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. தீன் என்பது தீனியாகிய உணவு, உணவு என்பது இனிமையுடையது. அதுபோல், இவரது பாடலில் காணப்படும் உவமை மிகவும் இனிமையானதாக இருப்பதால், இவரது பெயருக்கு முன் ‘தீன்மிதி’ என்னும் அடைமொழி தரப்பட்டுள்ளது.
தலைவன் தலைவிக்காக வெளியில் காத்திருக்கிறான். தலைவி தோழியிடம் சொல்கிறாள். என் தோள் அவரை எண்ணி வாடுகிறது. இதனைக் கண்ட தாய் முருகன் என்னை அணங்கியதால் இந்த வாட்டம் நேர்ந்துள்ளது என்று நினைக்கிறாள். இது யானையைக் கைக்குள் மறைப்பது போல உள்ளது. உண்மை வெளிப்படத் தலைவன் பல்லார் முன் தோன்றட்டும் என்கிறாள் தலைவி.