தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வல்லாரை (Centella Asiatica)

  • வல்லாரை
    (Centella asiatica)

    முனைவர் மரு.பெ.பாரதஜோதி
    இணைப்பேராசிரியர்
    சித்த மருத்துவத்துறை

    - வல்லாரை இலைப் பொடியை 100-300 கிராம் வரை பசுவின் பாலில் உண்டு வர மூளையைப் பலப்படுத்தி ஞாபக சக்தியை அதிகப்படுத்தும்.

    - இலையுடன் வெந்தயம் சேர்த்து குடிநீரிட்டு குழந்தைகளுக்கு ஏற்படும் சுரம், வயிற்றுக் கோளாறுகளை நீக்கத் தரலாம்.

    - இலையை அரைத்து வைத்துக் கட்ட யானைக்கால் வீக்கம், விரை வீக்கம், கட்டிகள் இவை சரியாகும். இந்நோய்களில் ஏற்படும் சுரம் தீர இலையைச் சுரசம் செய்து 4,5 துளி வீதம் கொடுத்து வரலாம்.

    - இலையுடன் சீரகம், சர்க்கரை கூட்டி அரைத்துக் கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் சீதக் கழிச்சல், குருதிக் கழிச்சல் தீரும்.

    - சிறிதளவு இலையுடன் மிளகு, பூண்டு சேர்த்து அரைத்து காலையில் மட்டும் கொடுத்து, மோர் சாதம் சாப்பிட்டு வர தீராத புண்கள் தீரும்.

    - வல்லாரை இலையைத் துவையலாகச் செய்து, அதிக சுறுசுறுப்புடன் (Hyper acticity) காணப்படும் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் தீவிரம் குறையும்.

    - இலைச்சாறுடன் பசும்பால், அதிமதுரத்தூள் சேர்த்துக் கொடுத்து வர குழந்தைகளுக்கு ஏற்படும் நரம்பு நோய்களும், பெரியோர்க்கு ஏற்படும் சுரம், மேக நோய், வயிற்று நோய்கள் தீரும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:08:59(இந்திய நேரம்)