முகப்பு |
அம்மூவனார் |
4. நெய்தல் |
கானல் அம் சிறுகுடிக் கடல் மேம் பரதவர் |
||
நீல் நிற புன்னைக் கொழு நிழல் அசைஇ, |
||
தண் பெரும் பரப்பின் ஒண் பதம் நோக்கி, |
||
அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு, |
||
5 |
'அலரே அன்னை அறியின், இவண் உறை வாழ்க்கை |
|
அரிய ஆகும் நமக்கு' எனக் கூறின், |
||
கொண்டும் செல்வர்கொல்-தோழி!-உமணர் |
||
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி, |
||
கண நிரை கிளர்க்கும் நெடு நெறிச் சகடம் |
||
10 |
மணல் மடுத்து உரறும் ஓசை கழனிக் |
|
கருங் கால் வெண் குருகு வெரூஉம் |
||
இருங் கழிச் சேர்ப்பின் தம் உறைவின் ஊர்க்கே? | உரை | |
தலைவன் சிறைப்புறத்தானாக, தோழி அலர் அச்சம் தோன்றச் சொல்லி வரைவு கடாயது.-அம்மூவனார்
|
35. நெய்தல் |
பொங்கு திரை பொருத வார் மணல்அடைகரைப் |
||
புன் கால் நாவல் பொதிப் புற இருங் கனி |
||
கிளை செத்து மொய்த்த தும்பி, பழம் செத்துப் |
||
பல் கால் அலவன் கொண்ட கோட்கு அசாந்து, |
||
5 |
கொள்ளா நரம்பின் இமிரும் பூசல் |
|
இரை தேர் நாரை எய்தி விடுக்கும் |
||
துறை கெழு மாந்தை அன்ன இவள் நலம் |
||
பண்டும் இற்றே; கண்டிசின்தெய்ய; |
||
உழையின் போகாது அளிப்பினும், சிறிய |
||
10 |
ஞெகிழ்ந்த கவின் நலம்கொல்லோ?-மகிழ்ந்தோர் |
|
கள்களி செருக்கத்து அன்ன |
||
காமம்கொல்?-இவள் கண் பசந்ததுவே! | உரை | |
மண மனைப்பிற்றைஞான்று புக்க தோழி, 'நன்கு ஆற்றுவித்தாய்' என்ற தலைமகற்குச் சொல்லியது.-அம்மூவனார்
|
76. பாலை |
வருமழை கரந்த வால் நிற விசும்பின் |
||
நுண் துளி மாறிய உலவை அம் காட்டு |
||
ஆல நீழல் அசைவு நீக்கி, |
||
அஞ்சுவழி அஞ்சாது, அசைவழி அசைஇ, |
||
5 |
வருந்தாது ஏகுமதி-வால் இழைக் குறுமகள்!- |
|
இம்மென் பேர் அலர் நும் ஊர்ப் புன்னை |
||
வீ மலர் உதிர்ந்த தேன் நாறு புலவின் |
||
கானல் வார் மணல் மரீஇ, |
||
கல் உறச் சிவந்த நின் மெல் அடி உயற்கே! | உரை | |
புணர்ந்து உடன்போகாநின்ற தலைவன் இடைச் சுரத்துத் தலைவிக்கு உரைத்தது.-அம்மூவனார்
|
138. நெய்தல் |
உவர் விளை உப்பின் குன்று போல்குப்பை |
||
மலை உய்த்துப் பகரும், நிலையா வாழ்க்கை, |
||
கணம் கொள் உமணர் உயங்குவயின் ஒழித்த |
||
பண் அழி பழம் பார் வெண் குருகு ஈனும் |
||
5 |
தண்ணம் துறைவன், முன் நாள், நம்மொடு |
|
பாசடைக் கலித்த கணைக் கால் நெய்தல் |
||
பூவுடன் நெறிதரு தொடலை தைஇ, |
||
கண் அறிவுடைமை அல்லது, நுண் வினை |
||
இழை அணி அல்குல் விழவு ஆடு மகளிர் |
||
10 |
முழங்கு திரை இன் சீர் தூங்கும் |
|
அழுங்கல் மூதூர் அறிந்தன்றோ இன்றே. | உரை | |
'அலர் ஆயிற்று' என ஆற்றாளாய தலைமகட்குத் தலைவன் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.-அம்மூவனார்
|
275. நெய்தல் |
செந்நெல் அரிநர் கூர் வாட் புண்ணுறக் |
||
காணார் முதலொடு போந்தென, பூவே |
||
படையொடும் கதிரொடும் மயங்கிய படுக்கைத் |
||
தன்னுறு விழுமம் அறியா, மென்மெல, |
||
5 |
தெறு கதிர் இன் துயில் பசு வாய் திறக்கும் |
|
பேதை நெய்தற் பெரு நீர்ச் சேர்ப்பதற்கு |
||
யான் நினைந்து இரங்கேனாக, நோய் இகந்து, |
||
அறனிலாளன் புகழ, எற் |
||
பெறினும், வல்லேன்மன்-தோழி!-யானே. | உரை | |
சிறைப்புறமாகத் தலைமகனது வரவுணர்ந்து வற்புறுப்ப, வன்புறை எதிர்மொழிந்தது.-அம்மூவனார்
|
307. நெய்தல் |
கவர் பரி நெடுந் தேர் மணியும் இசைக்கும்; |
||
பெயர் பட இயங்கிய இளையரும் ஒலிப்பர்; |
||
கடல் ஆடு வியல் இடைப் பேர் அணிப் பொலிந்த |
||
திதலை அல்குல் நலம் பாராட்டிய |
||
5 |
வருமே-தோழி!-வார் மணற் சேர்ப்பன்: |
|
இறை பட வாங்கிய முழவுமுதற் புன்னை |
||
மா அரை மறைகம் வம்மதி-பானாள், |
||
பூ விரி கானல், புணர் குறி வந்து, நம் |
||
மெல் இணர் நறும் பொழில் காணா |
||
10 |
அல்லல் அரும் படர் காண்கம் நாம், சிறிதே. | உரை |
குறி நீட ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.-அம்மூவனார்
|
315. நெய்தல் |
ஈண்டு பெருந் தெய்வத்து-யாண்டு பல கழிந்தென, |
||
பார்த் துறைப் புணரி அலைத்தலின், புடை கொண்டு, |
||
மூத்து, வினை போகிய முரி வாய் அம்பி, |
||
நல் எருது நடை வளம் வைத்தென, உழவர் |
||
5 |
புல்லுடைக் காவில் தொழில் விட்டாங்கு, |
|
நறு விரை நன் புகை கொடாஅர், சிறு வீ |
||
ஞாழலொடு கெழீஇய புன்னை அம் கொழு நிழல் |
||
முழவு முதற் பிணிக்கும் துறைவ! நன்றும் |
||
விழுமிதின் கொண்ட கேண்மை நொவ்விதின் |
||
10 |
தவறும்; நன்கு அறியாய்ஆயின், எம் போல், |
|
ஞெகிழ் தோள், கலுழ்ந்த கண்ணர், |
||
மலர் தீய்ந்தனையர், நின் நயந்தோரே. | உரை | |
தலைமகனைப் பரத்தை நொந்து சொல்லியது.- அம்மூவனார்
|
327. நெய்தல் |
நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின், |
||
பாடு இல கலுழும் கண்ணொடு சாஅய்ச் |
||
சாதலும் இனிதே-காதல்அம் தோழி!- |
||
அந் நிலை அல்லஆயினும், 'சான்றோர் |
||
5 |
கடன் நிலை குன்றலும் இலர்' என்று, உடன் அமர்ந்து, |
|
உலகம் கூறுவது உண்டு என, நிலைஇய |
||
தாயம் ஆகலும் உரித்தே-போது அவிழ் |
||
புன்னை ஓங்கிய கானற் |
||
தண்ணம் துறைவன் சாயல் மார்பே. | உரை | |
வரையாது நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாய தலைமகள் வன்புறை எதிர் அழிந் தது.-அம்மூவனார்
|
395. நெய்தல் |
யாரை, எலுவ? யாரே, நீ எமக்கு |
||
யாரையும் அல்லை; நொதுமலாளனை; |
||
அனைத்தால் கொண்க, நம்மிடையே நினைப்பின்; |
||
கடும் பகட்டு யானை நெடுந் தேர்க் குட்டுவன் |
||
5 |
வேந்து அடு மயக்கத்து முரசு அதிர்ந்தன்ன, |
|
ஓங்கற் புணரி பாய்ந்து ஆடு மகளிர் |
||
அணிந்திடு பல் பூ மரீஇ, ஆர்ந்த |
||
ஆ புலம் புகுதரு பேர் இசை மாலைக் |
||
கடல் கெழு மாந்தை அன்ன, எம் |
||
10 |
வேட்டனை அல்லையால், நலம் தந்து சென்மே. | உரை |
'நலம் தொலைந்தது' எனத் தலைவனைத் தோழி கூறி, வரைவு கடாயது.-அம்மூவனார்
|
397. பாலை |
தோளும் அழியும், நாளும் சென்றென; |
||
நீள் இடை அத்தம் நோக்கி, வாள் அற்றுக் |
||
கண்ணும் காட்சி தௌவின; என் நீத்து |
||
அறிவும் மயங்கி, பிறிது ஆகின்றே; |
||
5 |
நோயும் பெருகும்; மாலையும் வந்தன்று; |
|
யாங்கு ஆகுவென்கொல் யானே? ஈங்கோ |
||
சாதல் அஞ்சேன்; அஞ்சுவல், 'சாவின் |
||
பிறப்புப் பிறிது ஆகுவதுஆயின், |
||
மறக்குவேன்கொல், என் காதலன்' எனவே. | உரை | |
பிரிவிடை ஆற்றாளாகி நின்ற தலைமகளை வற்புறாநின்ற தோழிக்கு 'ஆற்றுவல்' என்பது படச் சொல்லியது.-அம்மூவனார்
|