முகப்பு |
வாழை |
120. மருதம் |
தட மருப்பு எருமை மட நடைக் குழவி |
||
தூண் தொறும் யாத்த காண்தகு நல் இல், |
||
கொடுங் குழை பெய்த செழுஞ் செய் பேதை |
||
சிறு தாழ் செறித்த மெல் விரல் சேப்ப, |
||
5 |
வாளை ஈர்ந் தடி வல்லிதின் வகைஇ, |
|
புகை உண்டு அமர்த்த கண்ணள், தகை பெறப் |
||
பிறை நுதல் பொறித்த சிறு நுண் பல் வியர் |
||
அம் துகில் தலையில் துடையினள், நப் புலந்து, |
||
அட்டிலோளே அம் மா அரிவை- |
||
10 |
எமக்கே வருகதில் விருந்தே! சிவப்பாள் அன்று, |
|
சிறு முள் எயிறு தோன்ற |
||
முறுவல் கொண்ட முகம் காண்கம்மே. |
உரை | |
விருந்து வாயிலாகப்புக்க தலைவன் சொல்லியது.-மாங்குடி கிழார்
|
176. குறிஞ்சி |
எம் நயந்து உறைவி ஆயின், யாம் நயந்து |
||
நல்கினம் விட்டது என்? நலத்தோன் அவ் வயின் |
||
சால்பின் அளித்தல் அறியாது, 'அவட்கு அவள் |
||
காதலள் என்னுமோ?' உரைத்திசின்-தோழி!- |
||
5 |
நிரைத்த யானை முகத்து வரி கடுப்பப் |
|
போது பொதி உடைந்த ஒண் செங் காந்தள் |
||
வாழை அம் சிலம்பின் வம்பு படக் குவைஇ, |
||
யாழ் ஓர்த்தன்ன இன் குரல் இன வண்டு, |
||
அருவி முழவின் பாடொடு ஒராங்கு, |
||
10 |
மென்மெல இசைக்கும் சாரல், |
|
குன்ற வேலித் தம் உறைவின் ஊரே. |
உரை | |
பரத்தை தலைவியின் பாங்கிக்குப் பாங்காயினார் கேட்ப, விறலிக்குச் சொல்லியது.
|
188. குறிஞ்சி |
படு நீர்ச் சிலம்பில் கலித்த வாழைக் |
||
கொடு மடல் ஈன்ற கூர் வாய்க் குவி முகை, |
||
ஒள் இழை மகளிர் இலங்கு வளைத் தொடூஉம் |
||
மெல் விரல் மோசை போல, காந்தள் |
||
5 |
வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப! |
|
'நன்றி விளைவும் தீதொடு வரும்' என, |
||
அன்று நற்கு அறிந்தனள் ஆயின், குன்றத்துத் |
||
தேம் முதிர் சிலம்பில் தடைஇய |
||
வேய் மருள் பணைத் தோள் அழியலள்மன்னே. |
உரை | |
பகற்குறி மறுத்து வரைவு கடாயது.
|
222. குறிஞ்சி |
கருங் கால் வேங்கைச் செவ் வீவாங்கு சினை |
||
வடுக் கொளப் பிணித்த விடுபுரி முரற்சிக் |
||
கை புனை சிறு நெறி வாங்கி, பையென, |
||
விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப, யான் இன்று, |
||
5 |
பசுங் காழ் அல்குல் பற்றுவனன் ஊக்கிச் |
|
செலவுடன் விடுகோ-தோழி!-பலவுடன் |
||
வாழை ஓங்கிய வழை அமை சிலம்பில், |
||
துஞ்சு பிடி மருங்கின் மஞ்சு பட, காணாது, |
||
பெருங் களிறு பிளிறும் சோலை அவர் |
||
10 |
சேண் நெடுங் குன்றம் காணிய நீயே? |
உரை |
தோழி, தலைமகன் வரவு உணர்ந்து, சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது.-கபிலர்
|
225. குறிஞ்சி |
முருகு உறழ் முன்பொடு கடுஞ் சினம் செருக்கிப் |
||
பொருத யானை வெண் கோடு கடுப்ப, |
||
வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை, |
||
மெல் இயல் மகளிர் ஓதி அன்ன |
||
5 |
பூவொடு, துயல் வரும் மால் வரை நாடனை |
|
இரந்தோர் உளர்கொல்-தோழி!-திருந்து இழைத் |
||
தொய்யில் வன முலை வரி வனப்பு இழப்பப் |
||
பயந்து எழு பருவரல் தீர, |
||
நயந்தோர்க்கு உதவா நார் இல் மார்பே? |
உரை | |
வன்புறை எதிர் அழிந்தது; பரத்தை தலைமகட்குப் பாங்காயின வாயில் கேட்பச் சொல்லியதூஉம் ஆம்.-கபிலர்
|
232. குறிஞ்சி |
சிறு கண் யானைப் பெருங் கை ஈர்-இனம் |
||
குளவித் தண் கயம் குழையத் தீண்டி, |
||
சோலை வாழை முணைஇ, அயலது |
||
வேரல் வேலிச் சிறுகுடி அலற, |
||
5 |
செங் காற் பலவின் தீம் பழம் மிசையும் |
|
மா மலை நாட!-காமம் நல்கென |
||
வேண்டுதும்-வாழிய! எந்தை, வேங்கை |
||
வீ உக வரிந்த முன்றில், |
||
கல் கெழு பாக்கத்து அல்கினை செலினே. |
உரை | |
பகல் வருவானை இரவு வா எனத் தோழி சொல்லியது.-முதுவெங்கண்ணனார்
|
251. குறிஞ்சி |
நெடு நீர் அருவிய கடும் பாட்டு ஆங்கண், |
||
பிணி முதல் அரைய பெருங் கல் வாழைக் |
||
கொழு முதல் ஆய் கனி மந்தி கவரும் |
||
நல் மலை நாடனை நயவா, யாம், அவன் |
||
5 |
நனி பேர் அன்பின், நின் குரல் ஓப்பி, |
|
நின் புறங்காத்தலும் காண்போய், நீ? என் |
||
தளிர் ஏர் மேனித் தொல் கவின் அழிய, |
||
பலி பெறு கடவுட் பேணி, கலி சிறந்து, |
||
நுடங்கு நிலைப் பறவை உடங்கு பீள் கவரும்; |
||
10 |
தோடு இடம் கோடாய், கிளர்ந்து, |
|
நீடினை விளைமோ! வாழிய, தினையே! |
உரை | |
சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது.-மதுரைப் பெருமருதிள நாகனார்
|
309. குறிஞ்சி |
நெகிழ்ந்த தோளும், வாடிய வரியும், |
||
தளிர் வனப்பு இழந்த என் நிறனும் நோக்கி, |
||
'யான் செய்தன்று இவள் துயர்' என, அன்பின் |
||
ஆழல்; வாழி!-தோழி!-'வாழைக் |
||
5 |
கொழு மடல் அகல் இலைத் தளி தலைக் கலாவும், |
|
பெரு மலை நாடன் கேண்மை நமக்கே |
||
விழுமமாக அறியுநர் இன்று' என, |
||
கூறுவைமன்னோ, நீயே; |
||
தேறுவன்மன் யான், அவருடை நட்பே. |
உரை | |
'வரைவு நீட ஆற்றாள்' எனக் கவன்று தான் ஆற்றாளாகிய தோழியைத் தலைமகள் ஆற்றுவித்தது.-கபிலர்
|
355. குறிஞ்சி |
புதல்வன் ஈன்ற பூங் கண் மடந்தை |
||
முலை வாய் உறுக்கும் கை போல், காந்தட் |
||
குலைவாய் தோயும் கொழு மடல் வாழை |
||
அம் மடல் பட்ட அருவித் தீம் நீர் |
||
5 |
செம் முக மந்தி ஆரும் நாட! |
|
முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின், |
||
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்; |
||
அம் சில் ஓதி என் தோழி தோட் துயில் |
||
நெஞ்சின் இன்புறாய்ஆயினும், அது நீ |
||
10 |
என் கண் ஓடி அளிமதி- |
|
நின் கண் அல்லது பிறிது யாதும் இலளே! |
உரை | |
தோழி அருகு அடுத்தது; தோழி தலைமகளது ஆற்றாமை கண்டு வரைவு கடாயதூஉம் ஆம்.
|
399. குறிஞ்சி |
அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து, |
||
குருதி ஒப்பின் கமழ் பூங் காந்தள் |
||
வரி அணி சிறகின் வண்டு உண மலரும் |
||
வாழை அம் சிலம்பில், கேழல் கெண்டிய |
||
5 |
நிலவரை நிவந்த பல உறு திரு மணி |
|
ஒளி திகழ் விளக்கத்து, ஈன்ற மடப் பிடி, |
||
களிறு புறங்காப்ப, கன்றொடு வதியும் |
||
மா மலை நாடன் நயந்தனன் வரூஉம் |
||
பெருமை உடையள் என்பது |
||
10 |
தருமோ-தோழி!-நின் திரு நுதல் கவினே? | உரை |
நெடுங்காலம் வந்து ஒழுக ஆற்றாமை வேறுபட நின்ற தலைமகளைத் தோழி, 'எம்பெருமான் இதற்காய நல்லது புரியும்' என்று தலைமகன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது.'இதற்காய நல்லது புரியும் பெருமான் திறம் வேண்டும்' என்றாட்குத் தலைமகள் சொல
|
400. மருதம் |
வாழை மென் தோடு வார்புஉறுபு ஊக்கும் |
||
நெல் விளை கழனி நேர் கண் செறுவின், |
||
அரிவனர் இட்ட சூட்டு அயல், பெரிய |
||
இருஞ் சுவல் வாளை பிறழும் ஊர! |
||
5 |
நினின்று அமைகுவென்ஆயின், இவண் நின்று, |
|
இன்னா நோக்கமொடு எவன் பிழைப்பு உண்டோ? |
||
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து, |
||
அறம் கெட அறியாதாங்கு, சிறந்த |
||
கேண்மையொடு அளைஇ, நீயே |
||
10 |
கெடு அறியாய் என் நெஞ்சத்தானே. | உரை |
பரத்தை தலைவனைப் புகழ்ந்தது. முன்பு நின்று யாதோ புகழ்ந்தவாறு எனின், 'நின் இன்று அமையாம்' என்று சொன்னமையான் என்பது.-ஆலங்குடி வங்கனார்
|