முகப்பு |
குவளை |
6. குறிஞ்சி |
நீர் வளர் ஆம்பற் தூம்புடைத்திரள் கால் |
||
நார் உரித்தன்ன மதன் இல் மாமை, |
||
குவளை அன்ன ஏந்து எழில் மழைக் கண், |
||
திதலை அல்குல், பெருந் தோள், குறுமகட்கு |
||
5 |
எய்தச் சென்று செப்புநர்ப் பெறினே, |
|
'இவர் யார்?' என்குவள் அல்லள்; முனாஅது, |
||
அத்தக் குமிழின் கொடு மூக்கு விளை கனி |
||
எறி மட மாற்கு வல்சி ஆகும் |
||
வல் வில் ஓரி கானம் நாறி, |
||
10 |
இரும் பல் ஒலிவரும் கூந்தல் |
|
பெரும் பேதுறுவள், யாம் வந்தனம் எனவே. | உரை | |
இரவுக்குறிப்பாற்பட்டு ஆற்றானாய தலைவன், தோழி கேட்ப, தன்நெஞ்சிற்குச் சொல்லியது.-பரணர்
|
34. குறிஞ்சி |
கடவுட் கற்சுனை அடை இறந்து அவிழ்ந்த |
||
பறியாக் குவளை மலரொடு காந்தள் |
||
குருதி ஒண் பூ உரு கெழக் கட்டி, |
||
பெரு வரை அடுக்கம் பொற்பச் சூர்மகள் |
||
5 |
அருவி இன் இயத்து ஆடும் நாடன் |
|
மார்பு தர வந்த படர் மலி அரு நோய் |
||
நின் அணங்கு அன்மை அறிந்தும், அண்ணாந்து, |
||
கார் நறுங் கடம்பின் கண்ணி சூடி, |
||
வேலன் வேண்ட, வெறி மனை வந்தோய்! |
||
10 |
கடவுள் ஆயினும் ஆக, |
|
மடவை மன்ற, வாழிய முருகே! | உரை | |
தோழி தெய்வத்துக்கு உரைப்பாளாய் வெறி விலக்கியது.-பிரமசாரி
|
37. பாலை |
பிணங்கு அரில் வாடிய பழ விறல்நனந் தலை, |
||
உணங்குஊண் ஆயத்து ஓர் ஆன் தெள் மணி |
||
பைபய இசைக்கும் அத்தம், வை எயிற்று |
||
இவளொடும் செலினோ நன்றே; குவளை |
||
5 |
நீர் சூழ் மா மலர் அன்ன கண் அழ, |
|
கலை ஒழி பிணையின் கலங்கி, மாறி |
||
அன்பிலிர் அகறிர் ஆயின், என் பரம் |
||
ஆகுவது அன்று, இவள் அவலம்-நாகத்து |
||
அணங்குடை அருந் தலை உடலி, வலன் ஏர்பு, |
||
10 |
ஆர்கலி நல் ஏறு திரிதரும் |
|
கார் செய் மாலை வரூஉம் போழ்தே. | உரை | |
வரைவிடை வைத்துப்பிரிவின்கண் தோழி சொல்லியது.-பேரி சாத்தனார்
|
77. குறிஞ்சி |
மலையன் மா ஊர்ந்து போகி, புலையன் |
||
பெருந் துடி கறங்கப் பிற புலம் புக்கு, அவர் |
||
அருங் குறும்பு எருக்கி, அயா உயிர்த்தாஅங்கு |
||
உய்த்தன்றுமன்னே-நெஞ்சே!-செவ் வேர்ச் |
||
5 |
சினைதொறும் தூங்கும் பயம் கெழு பலவின் |
|
சுளையுடை முன்றில், மனையோள் கங்குல் |
||
ஒலி வெள் அருவி ஒலியின் துஞ்சும் |
||
ஊறலஞ் சேரிச் சீறூர், வல்லோன் |
||
வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளை |
||
10 |
அகன் தொடி செறித்த முன்கை, ஒள் நுதல், |
|
திதலை அல்குல், குறுமகள் |
||
குவளை உண்கண் மகிழ் மட நோக்கே. | உரை | |
பின்னின்ற தலைவன்நெஞ்சிற்கு உரைத்தது.-கபிலர்
|
105. பாலை |
முளி கொடி வலந்த முள் அரை இலவத்து |
||
ஒளிர் சினை அதிர வீசி, விளிபட |
||
வெவ் வளி வழங்கும் வேய் பயில் மருங்கில், |
||
கடு நடை யானை கன்றொடு வருந்த, |
||
5 |
நெடு நீர் அற்ற நிழல் இல் ஆங்கண் |
|
அருஞ் சுரக் கவலைய என்னாய்; நெடுஞ் சேண் |
||
பட்டனை, வாழிய-நெஞ்சே!-குட்டுவன் |
||
குட வரைச் சுனைய மா இதழ்க் குவளை |
||
வண்டு படு வான் போது கமழும் |
||
10 |
அம் சில் ஓதி அரும் படர் உறவே. | உரை |
இடைச் சுரத்து மீளலுற்ற நெஞ்சினைத் தலைமகன் கழறியது.-முடத்திருமாறன்
|
262. பாலை |
தண் புனக் கருவிளைக் கண் போல் மா மலர், |
||
ஆடு மயிற் பீலியின் வாடையொடு துயல்வர, |
||
உறை மயக்குற்ற ஊர் துஞ்சு யாமத்து, |
||
நடுங்கு பிணி நலிய நல் எழில் சாஅய், |
||
5 |
துனி கூர் மனத்தள், முனி படர் உழக்கும் |
|
பணைத் தோள், அரும்பிய சுணங்கின், கணைக் கால், |
||
குவளை நாறும் கூந்தல், தேமொழி |
||
இவளின் தீர்ந்தும், ஆள்வினை வலிப்ப, |
||
'பிரிவல்' நெஞ்சு, என்னும்ஆயின், |
||
10 |
அரிது மன்றம்ம, இன்மையது இளிவே. | உரை |
தலைமகள் ஆற்றாக் குறிப்பு அறிந்து, பிரிவிடை விலக்கியது.-பெருந்தலைச் சாத்தனார்
|
271. பாலை |
இரும் புனிற்று எருமைப் பெருஞ் செவிக் குழவி |
||
பைந் தாது எருவின் வைகு துயில் மடியும் |
||
செழுந் தண் மனையோடு எம் இவண் ஒழிய, |
||
செல் பெருங் காளை பொய்ம் மருண்டு, சேய் நாட்டுச் |
||
5 |
சுவைக் காய் நெல்லிப் போக்கு அரும் பொங்கர் |
|
வீழ் கடைத் திரள் காய் ஒருங்குடன் தின்று, |
||
வீ சுனைச் சிறு நீர் குடியினள், கழிந்த |
||
குவளை உண்கண் என் மகள் ஓரன்ன, |
||
செய் போழ் வெட்டிய பொய்தல் ஆயம், |
||
10 |
மாலை விரி நிலவில் பெயர்பு புறங்காண்டற்கு, |
|
மா இருந் தாழி கவிப்ப, |
||
தா இன்று கழிக, எற் கொள்ளாக் கூற்றே. | உரை | |
மனை மருண்டு சொல்லியது.
|
317. குறிஞ்சி |
நீடு இருஞ் சிலம்பின் பிடியொடு புணர்ந்த |
||
பூம் பொறி ஒருத்தல் ஏந்து கை கடுப்ப, |
||
தோடு தலை வாங்கிய நீடு குரற் பைந் தினை, |
||
பவளச் செவ் வாய்ப் பைங் கிளி கவரும் |
||
5 |
உயர் வரை நாட! நீ நயந்தோள் கேண்மை |
|
அன்னை அறிகுவள்ஆயின், பனி கலந்து |
||
என் ஆகுவகொல்தானே-எந்தை |
||
ஓங்கு வரைச் சாரல் தீம் சுனை ஆடி, |
||
ஆயமொடு குற்ற குவளை |
||
10 |
மா இதழ் மா மலர் புரைஇய கண்ணே? | உரை |
தோழி, தலைமகனை வரைவு கடாயது.-மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்
|
332. குறிஞ்சி |
இகுளை தோழி! இஃது என் எனப்படுமோ- |
||
'குவளை குறுநர் நீர் வேட்டாங்கு, |
||
நாளும்நாள் உடன் கவவவும், தோளே |
||
தொல் நிலை வழீஇய நின் தொடி' எனப் பல் மாண் |
||
5 |
உரைத்தல் ஆன்றிசின், நீயே: விடர் முகை, |
|
ஈன் பிணவு ஒடுக்கிய இருங் கேழ் வயப் புலி |
||
இரை நசைஇப் பரிக்கும் மலைமுதல் சிறு நெறி, |
||
தலைநாள் அன்ன பேணலன், பல நாள், |
||
ஆர் இருள் வருதல் காண்பேற்கு, |
||
10 |
யாங்கு ஆகும்மே, இலங்கு இழை செறிப்பே? | உரை |
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி களவுக் காலத்து வற்புறுப்ப,தலைவி கூறியது; வன்புறை எதிர்மறுத்ததூஉம் ஆம்.-குன்றூர்கிழார் மகன் கண்ணத்தனார்
|
367. முல்லை |
கொடுங் கண் காக்கைக் கூர் வாய்ப் பேடை |
||
நடுங்கு சிறைப் பிள்ளை தழீஇ, கிளை பயிர்ந்து, |
||
கருங் கண் கருனைச் செந்நெல் வெண் சோறு |
||
சூருடைப் பலியொடு கவரிய, குறுங் கால் |
||
5 |
கூழுடை நல் மனைக் குழுவின இருக்கும் |
|
மூதில் அருமன் பேர் இசைச் சிறுகுடி |
||
மெல் இயல் அரிவை! நின் பல் இருங் கதுப்பின் |
||
குவளையொடு தொடுத்த நறு வீ முல்லைத் |
||
தளை அவிழ் அலரித் தண் நறுங் கோதை |
||
10 |
இளையரும் சூடி வந்தனர்: நமரும் |
|
விரி உளை நன் மாக் கடைஇ, |
||
பரியாது வருவர், இப் பனி படு நாளே. | உரை | |
வரவு மலிந்தது-நக்கீரர்
|
376. குறிஞ்சி |
முறஞ்செவி யானைத் தடக் கையின் தடைஇ |
||
இறைஞ்சிய குரல பைந் தாட் செந் தினை, |
||
வரையோன் வண்மை போல, பல உடன் |
||
கிளையோடு உண்ணும் வளைவாய்ப் பாசினம்! |
||
5 |
குல்லை, குளவி, கூதளம், குவளை, |
|
இல்லமொடு மிடைந்த ஈர்ந் தண் கண்ணியன், |
||
சுற்று அமை வில்லன், செயலைத் தோன்றும் |
||
நல் தார் மார்பன், காண்குறின், சிறிய |
||
நன்கு அவற்கு அறிய உரைமின்; பிற்றை |
||
10 |
அணங்கும் அணங்கும் போலும்? அணங்கி, |
|
வறும் புனம் காவல் விடாமை |
||
அறிந்தனிர்அல்லிரோ, அறன் இல் யாயே? | உரை | |
தோழி, கிளிமேல் வைத்துச் சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது.-கபிலர்
|